விஜய் டிவியில் புதிதாக ஆரம்பித்தாலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் அண்மையில் மனோஜிற்கும் ரோகினிக்கும் திருமணம் நடைபெற்றது.
இதனால் ரோகினி பற்றிய உண்மை எப்போது விஜயாவுக்கு தெரிய வரும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.மேலும் தன்னுடைய காரில் போதைப் பொருள் வைத்தது கந்துவட்டிக்காரன் தான் என்று தெரிந்த பிறகு முத்து மீனா மீது கடும் கோபத்தில் இருக்கின்றார்.
இதனால் எப்போது இருவரும் புரிந்து கொண்டு வாழ்வார்கள் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது. அத்தோடு இந்த சீரியல் தற்பொழுது ரிஆர்பியிலும் முன்னணியில் நிற்கின்றது.
இதனால் இந்த சீரியல் தெலுங்கில் ரீமேக் பண்ணப்படப்போவதாகக் கூறப்படுகின்றது. இந்த ரீமேக் சீரியலில் மீனா காரெக்டரில் அமுல்யா கௌடா என்பவர் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!