இயக்குநர் ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் தான் நடிகை ஜெயலலிதா.இதனை தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் சேர்ந்து ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்தார்.இந்தத் திரைப்படம் இவருடைய கெரியரில் முக்கியமான திரைப்படமாகவும் அமைந்தது.
சினிமாவில் கொடிக்கட்டி பறந்த இவர் சிவாஜி கணேசன்,ஜெமினி கணேசன் எனப் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருக்கின்றார். மேலும் இவர் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அரசியலில் ஆர்வம் இருந்ததால் நடிப்பை விட்டிட்டு அரசியலில் இணைந்திருந்தார்.
இவர் சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் வெற்றி கண்டார்.ஜெயலலிதா சினிமாவில் பெரிய நடிகையாக மாற பக்க பலமாக இருந்ததே அவரது அம்மா சந்தியா தான்.இந்நிலையில் ஜெயலலிதா தனது அம்மாவுடன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Listen News!