• Sep 21 2024

அடடே நடிகை நதியாவா இது?- இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுப்பார் போல இருக்கே- வாவ் வேற லெவல் அழகில் இருக்கின்றாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வந்தவர் நதியா. தமிழ் மலையாளம், தெலுங்கு என பன்மொழி பிரபலமாக வலம் வந்தவர். தமிழில் 'பூவே பூச்சூடவா' எனும் படத்தின் மூலம் அறிமுகமானார்.

 இதனைத் தொடர்ந்து  மந்திரப்புன்னகை, உயிரே உனக்காக, உனக்காகவே வாழ்கிறேன், நிலவே மலரே, பூமழை பொழிகிறது, சின்னத்தம்பி பெரியதம்பி, பாடு நிலவே, அன்புள்ள அப்பா, ராஜாதி ராஜா,  ராஜகுமாரன், சின்ன மேடம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கின்றார்.


 1988 ஆம் ஆண்டு  ஷிரிஷ் காட்போல் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் வெளிநாடுகளில் தன வாழ்க்கை பயணத்தை துவங்கினார்.பின்னர் 2007 ஆம் ஆண்டு மீண்டும் இந்தியா திரும்பி வந்த நதியா முன்னதாக ஜெயம் ரவி நடித்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமியின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு அம்மா, மாமியார் போன்ற கேரக்டர்களுக்கு அதிகமாக தேர்வு செய்து நடித்து வருகின்றார்.


 தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் ஒப்பந்தமாக தொடங்கிய  இவர்  சமீபத்தில் வெளியான ராம் போத்தினேனியின் தீ வாரியர் படத்தில் நாயகனுக்கு அம்மாவாக நடித்திருந்தார் . சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் ஆறு ஒன்றில் போட் ஓடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.









Advertisement

Advertisement