தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், அப்படத்தின் வாயிலாக மக்கள் மனங்களில் நீங்காத இடத்தினைப் பெற்றுக் கொண்டவர் நடிகை காம்னா. இவர் ஆரம்பத்தில் மாடலிங் துறை மூலமாக பல விளம்பர படங்களில் நடித்து தான் மக்களிடையே பிரபலமானார்.
அதன் பின்னர் தான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அந்தவகையில் தெலுங்கு திரைப்படமான 'பிரேமிகுலு' என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்தப் படம் ஆனது தோல்வியடைந்த போதிலும், அடுத்து அவர் நடித்த 'ரணம்' படம் பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.
தமிழ் சினிமாவில் ஜெயம் ரவியுடன் இணைந்து இவர் நடித்த 'இதயத்திருடன்' தான் அவரது முதலாவது தமிழ்ப்படமாகும். அதுமட்டுமல்லாது இவர் ஜீவனுக்கு ஜோடியாக 'மச்சக்காரன்' என்ற படத்திலும் நடித்துள்ளார்.
அத்தோடு நடிகர் லாரன்ஸ் நடிப்பில் வெளியான 'ராஜாதிராஜா' என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார. தெலுங்கு, தமிழ் எனத் தொடர்ந்து கன்னடம் வரை கால் பதித்திருக்கின்றார்.
ஆனால் இவர் தற்போது எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் தன் குடும்பத்தினரோடு நேரத்தினை செலவிட்டு வருகிறார். இருப்பினும் நடிகை காம்னா திருமணம் நடந்து இரண்டு குழந்தை பிறந்த பின்னரும் 'கருடா' என்ற ஒரு கன்னட திரைப் படத்தில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நடிகைகளை பொறுத்தவரையில் எப்போதுமே ரசிகர்களின் ஆதரவு குறைந்ததும் திருமணம் செய்து தனது கணவருடன் செட்டில் ஆகி விடுவார்கள்.
அதே போல தான் நமது நடிகை காம்னாவும் தற்போது நமது தமிழ் திரைப்படத்தில் நடிப்பதை மொத்தமாக நிறுத்தி தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
ஆனாலும் இவர் தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்து நடிப்பில் அசத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Listen News!