மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ், லால், சுனில் என பலர் நடிப்பில் நேற்றைய தினம் வெளியான திரைப்படம் மாமன்னன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் நேற்று தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களிடம் இருந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.
இந்நிலையில் மாமன்னன் ப்ரோமோஷன் தொடர்பாக உதயநிதி பங்கேற்ற ஒரு நேர்காணலில், ‘உங்களை முதல் படத்தில் இருந்தே நடிகராக மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். என்னதான் வெளியில் பாராட்டினாலும் வீட்டில் செல்லமாக கிண்டல் செய்த படம் ஏதாவது இருக்கிறதா?’ என உதயநிதியிடம் கேட்கப்பட்டது.
அதற்கு உதயநிதி பதிலளிக்கையில் "படம் பேர் சொல்ல மாட்டேன். எடுத்த எங்களுக்கே கடைசி வரை அது பேய் படமா, காமெடி படமா என தெரியல. அந்த படம் நல்லா ஓடுச்சி. அப்பதான் எனக்கு ஒன்னு புரிஞ்சிது. இதுதான் தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை என்ன என்பது தெரிந்தது" என்றார்.
மேலும் "அந்த படத்தை என்னுடைய குடும்பத்தினருக்கு பிரிவ்யூ போட்டேன். இடைவேளைக்கு பின் என் சகோதரியை காணவில்லை. உடனே போன் பண்ணி ஏதாவது அவசர வேலையா வீட்டுக்கு போய்ட்டியா, ஆளை காணோமே என கேட்டேன். அதற்கு அவர் "இதெல்லாம் ஒரு படம்ன்னு எடுத்து என்னை பிரிவ்யூ பார்க்க தைரியமா கூப்பிட்டுருக்க" எனக் கலகலப்பாக கூறி இருக்கின்றார்.
Listen News!