தமிழ் சினிமாவில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான மத யானை கோட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகர் கதிர். எப்போதும் வித்தியாசமான கதாப்பாத்திரங்களைத் தெரிந்தெடுத்து நடித்து வரும் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.
இதையடுத்து சில படங்களில் நடித்து வந்த இவர் 2018 -ம் ஆண்டு வெளிவந்த பெரியேறும் பெருமாள் படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.இப்படம் இவருடைய கெரியரில் முக்கிய திருப்பு முனையை ஏற்படுத்திய திரைப்படமாகவும் அமைந்தது.
இது தவிர விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படத்திலும் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்திருந்தார்.இவர் கடந்த 2018 -ம் ஆண்டு சஞ்சனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்தது.
இந்நிலையில் கதிர் தனது மனைவியுடன் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் கதிர் தன்னுடைய புகைப்படங்களையே அதிகம் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!