ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் 2000-ஆம் ஆண்டு வெளியான ‘கஹோ நா ப்யார் ஹே’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன். எனினும் இவர் இதற்கு முன்னரும் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கின்றார். இவரது சினிமாப் பயணத்தின் ஆரம்ப காலங்களில் ஒரே மாதிரியான நடிப்பு முறையையே இவர் பின்பற்றி வந்தார். ஆனால் ‘காபில்’ படத்துக்குப் பிறகு முற்றிலும் வேறுபட்ட ஒரு நடிகனாக மாறி விட்டார். அதனைத் தொடர்ந்து பல விருதுகளையும் வென்றிருக்கின்றார்.
இதனைத் தொடர்ந்து 'யாதேன்', 'மிஷன் காஷ்மீர்', 'லஷ்யா', 'தூம் 2' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கின்றார். இவ்வாறாக பல படங்களில் நடித்து வந்த இவர் சிறிது காலங்களின் பின்னர் சுஷேன் ரோஷன்ஸ் ஹவுஸ் ஆஃப் டிசைன் உரிமையாளரின் மகளாகிய சுஷேன் கான் அவர்களைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் நல்வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக 2 மகன்களும் உள்ளனர்.
எனினும் தற்போது நடிகர் ஹ்ருத்திக் ரோஷன் மனைவி சுசானே கானை விவாகரத்து செய்து விட்டார். அதனைத் தொடர்ந்து தற்போது நடிகை சபா ஆசாத் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. அதுமட்டுமன்றி இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக ஒன்றாக வெளியில் சென்று வரும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன. அதுமட்டுமன்றி கரண் ஜோஹர் என்பவரின் 50-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஒன்றாக கலந்துக் கொண்டதன் மூலம் அவர்கள் இருவரும் கிட்டத்தட்ட தங்கள் உறவை ரசிகர்களுக்கு அதிகாரப்பூர்வமாக்கியுள்ளனர்.
இந்த நிலையில் ஹ்ரித்திக் மற்றும் சபா விரைவில் திருமணம் செய்துக் கொண்டு தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் செய்தி ஒன்று வெளியாகி இருக்கின்றது. எனினும் இது எவ்வளவு தூரம் உண்மைத் தன்மை வாய்ந்தது என்பதை நிரூபிக்கும் வகையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது ஹ்ரித்திக் ரோஷனும், சபா ஆசாத்தும் எப்போதும் மகிழ்ச்சியான உறவில் உள்ளனர். அவர்கள் ஒன்றாக அதிக நேரம் செலவிடுவதுடன் விடுமுறைக்காக வெளிநாடுகளுக்கும் இருவரும் ஒன்றாக இணைந்து சென்று வருகிறார்கள்.
மேலும் சபா நடிகர் ஹ்ரித்திக்கின் குழந்தைகளுடனும் அதிகளவு நெருக்கம், அன்பு காட்டி வருகிறார். இருப்பினும் சபாவும், ஹ்ரித்திக்கும் தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் அவசரத்தில் இல்லை எனக் கூறப்படுகின்றது. அதுமட்டுமன்றி அவர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் ரிலேஷன்ஷிப்பை ரசித்து அனுபவித்து வாழ்ந்து வருகின்றார்கள். அத்தோடு திருமணம் செய்து கொள்ள வேண்டுமா எனவும் யோசித்து வருகின்றனர் எனவும் கூறப்படுகின்றது.
எனவே இவை யாவற்றையும் வைத்து நோக்கும் போது இவர்கள் இருவரும் தற்போது திருமணம் செய்து கொள்ளும் ஐடியாவில் இல்லை என்பது தெளிவாகின்றது.
பிற செய்திகள்
- பணத்திற்கு ஆசைப்பட்டுத்தான் இவ்வாறு செய்கின்றார்களா..?அந்த வரிசையில் இணைந்த சூர்யா..!
- “அரசாங்கம் அடிக்கடி power cut செய்து மக்களுக்கு உதவும்”; தமிழக அரசை கிண்டலடித்த நடிகை கஸ்தூரி..வைரலாகும் ட்விட்டர் பதிவு
- கொஞ்சம் ஓவரா தான் போறாங்க…படு கவர்ச்சி உடையில் அமலா பால்…வெளியான புகைப்படங்கள்..!
- பிரபல நடிகை கர்ப்பமாக இருக்கின்றாரா..? குழப்பத்தை கிளப்பிய நெட்டிசன்கள்..! காரணம் இதுவா..?
- கவர்ச்சி உடையில் ரசிகர்களைக் கவரும் ஐஸ்வர்யா மேனன்…வெளியான புகைப்படங்கள்..!என்னம்மா இப்பிடிப் பண்றீங்களே..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!