தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் 90களில் பிரபல்யமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ரம்பா.அந்த வகையில் இவர் உள்ளத்தை அள்ளித்தா என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். இதனை அடுத்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார்.
இவ்வாறு பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதோடு செட்டில் ஆகி விட்டார். தற்பொழுது இவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.
அவரது கணவர் கனடா மற்றும் சென்னையில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார். ரம்பா குழந்தைகள் மற்றும் குடும்பத்தை மட்டும் கவனித்து வருகிறார்.ரம்பாவுக்கு வாசு என்கிற சகோதரர் இருக்கிறார்.
ரம்பா 2003ல் சகோதரர் வாசு உடன் சேர்ந்து த்ரீ ரோசஸ் என்கிற படத்தை தயாரித்தார். ஆனால் அந்த படம் படுதோல்வி அடைந்ததால் ரம்பா மிகப்பெரிய கடனாளி ஆனார். அதை சொத்துக்களை விற்று தான் ரம்பா அடைந்தார்.
தற்போது ரம்பாவின் குடும்பத்தை பார்க்க சகோதரர் வாசு அவரது வீட்டுக்கு வந்திருக்கிறார். அவர் குழந்தைகள் உடன் எடுத்துக்கொண்ட போட்டோவை ரம்பா வெளியிட்டு இருக்கிறார்.இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதையும் காணலாம்.
Listen News!