தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட இயக்குநர்களில் மோகன் ஜியும் ஒருவர். இவரது முதல் திரைப்படமான பழைய வண்ணாரப்பேட்டை திரைப்பட விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. இவரது இரண்டாவது திரைப்படமான திரௌபதி நல்ல வசூல் சாதனை புரிந்தது.
இவர் 2021 இல் ருத்ர தாண்டவம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இவர் இந்த திரைப்படங்களில் கூறிய கருத்துக்கள், பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் உருவாக்கி இருந்தது.
சமீபத்தில் பகாசுரன் திரைப்படம் வெளிவர உள்ள நிலையில் இவரிடம் ஒரு பேட்டியின் போது சில புகைப்படங்களை காண்பித்து எந்த சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்டது என கேட்டனர். இதில் சந்தானம், லாரன்ஸ் மாஸ்டர் இவர்களுடன் எடுத்த புகைப்படங்களை காண்பித்தனர். அதற்கு அவரும் எப்போது எடுத்தது என்று கூறியிருந்தார்.
அவ்விடத்தில் அஜித்துடன் மோகன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை காண்பித்தனர்.
அதற்கு அவர் இது அஜித்தின் மகளின் பிறந்தநாளில் எடுக்கப்பட்ட புகைப்படம். நான் ஒரு அஜித் ரசிகன் எனக்கு இந்த புகைப்படம் எடுத்தது வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு சந்தர்ப்பம். என கூறியிருந்தார்.
Listen News!