தமிழ் சினிமாவில் பிரசாந்த்-சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி திரைப்படத்தில் குணச்சித்திர நட்சத்திரமாக நடித்தவர் தான் த்ரிஷா.இதனைத் தொடர்ந்து கடந்த 2002ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியாகியிருந்த மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
இப்படத்தில் கிடைத் வரவேற்பை அடுத்து விஜய் அஜித், சூர்யா, விஷால் ஜெயம் ரவி ,ஷாம், ஸ்ரீகாந்த் ,விக்ரம் எனப் பல நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்களில் நடித்திருக்கின்றார்.
இப்போது த்ரிஷா இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றார். வரும் செப்டம்பர் 30ம் தேதி படம் பல மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது நடிகை த்ரிஷாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. தனது சிறுவயதில் நடிகை த்ரிஷா பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் நம்ம த்ரிஷாவா இது எவ்வளவு கியூட்டாக இருக்கின்றார் எனக் கேட்டு வருவதையும் காணலாம்
Listen News!