தமிழ் சினிமாவில் 90களில் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகராக வலம் வந்தவர் தான் அரவிந்த்சாமி. இவர் பெரும்பாலும் மணிரத்தினம் படத்தின் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடித்து வந்தார். தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள நெக்கட்டில் ரோலில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் அரவிந்த்சாமியின் தந்தையும் சினிமாவில் பிரபல நடிகர் என்பது பலரும் அறியாத விஷயம். அதுமட்டுமின்றி சின்னத்திரை தொடர்களில் அவரது அப்பா ஒரு காலகட்டத்தில் பட்டையை கிளப்பி இருந்தார்.அதாவது சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் டெல்லி குமார்.
மெட்டிஒலி, ஆனந்தம் போன்ற பிரபல சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் டெல்லி குமார் நடித்திருந்தார்.அத்தோடு மட்டுமல்லாமல் அரவிந்த்சாமிக்கு தனது அப்பா மீது மிகுந்த பயம் உள்ளதாம். சிறுவயதிலிருந்தே தனது மாமா வீட்டில் தான் அரவிந்த்சாமி வளர்ந்துள்ளார். மேலும் ரோஜா படத்தில் நடித்த போது தனது அப்பாவுடன் தியேட்டருக்கு படம் பார்க்க சென்றுள்ளார்.
அந்த சமயத்தில் பயத்துடன் அமர்ந்திருந்த அரவிந்த்சாமி ரோஜா படத்தில் இடம் பெற்ற புது வெள்ளை மழை என்ற பாடல் வரும்போது பாத்ரூம் போயிட்டு வரேன் என்று அப்பாவிடம் சொல்லிவிட்டு போய்விட்டாராம். அந்த பாட்டு முடிந்த பிறகு தான் மீண்டும் தியேட்டருக்குள்ளேயே வந்தாராம்.
அப்படி தந்தைக்கு பயந்து நடித்த அரவிந்த்சாமி இப்போது சித்தார்த் அபிமன்யு போன்ற வில்லன் கதாபாத்திரங்களில் பட்டையை கிளப்பி வருகிறார். இப்போதும் அரவிந்த் சாமிக்கு தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!