நான் பல சரிவுகளை சந்தித்தவன். என்னைத் திருமணம் செய்திருந்தால் என்னோட மனைவிபிள்ளைகளும் கஷ்டப்பட்டிருப்பார்கள். அதனால் தான் நான் திருமணம் செய்யவில்லை என எஸ்.ஜே சூர்யா கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பாரதி ராஜாவின் உதவி இயக்குநராக இருந்து வாலி என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் எஸ்ஜே சூர்யா. இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை அடுத்து விஜய்யை வைத்து குஷி என்னும் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
இப்படங்கள் இரண்டும் இவருடைய கெரியரில் மட்டுமல்லாது விஜய் அஜித் ஆகியோரின் கெரியரிலும் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. தொடர்ந்து படங்களை இயக்கி வந்த இவர் ஒரு கட்டத்தில் நடிப்பதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்.
இருப்பினும் இவர் நடிப்பில் வெளியாகிய படங்கள் தோல்வியை சந்தித்ததால் சில காலம் சினிமாவை விட்டு விலகியிருந்தார். இந்த நிலையில் தற்பொழுது மீண்டும் கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் தன்னுடைய திருமணம் குறித்து தன்னுடைய சமீபத்திய பேட்டியில் அவர் மனம் திறந்துள்ளார்.
தான் பெரிய அளவிலான சரிவுகளை சந்தித்த நிலையில் தனக்கு திருமணம் நடந்திருந்தால் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளையும் அது பாதித்திருக்கும் என்றும் இதன் காரணமாகவே தான் திருமணம் குறித்து யோசிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
தான் சிங்கிளாக இருந்தால் தான் எதைவேண்டுமானாலும் செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.தன்னுடைய சரிவின்போது தான் சிங்கிளாக இருந்தால் ஒரு ஹோட்டலில் சென்று வேலை செய்ய முடியும், திடீரென சென்று நடிக்க முடியும், எதை வேண்டுமானாலும் திட்டமிடாமல் செய்ய முடியும். ஆனால் திருமணம் நடந்தால் தன்னுடைய குடும்பத்தினர் குறித்து யோசிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Listen News!