90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் கதாநாயகி, நடிகை தேவயானி பலருக்கும் பரீட்சையமானவர்தான். இவர் பல திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தற்போது சின்னத்திரைகளிலும் நடித்து வருகிறார்.
அவர் இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணமும் செய்திருந்தார். ஆனால் இவர்களுடைய காதல் மலர்ந்தது பலருக்கும் வியப்பான விஷயம் தான்.அந்த நேரத்தில் நடிகை தேவயானி மற்றும் ராஜகுமாரன் காதல் பெரிய அளவில் பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து பல பிரச்சனைகளையும் தாண்டி தேவயானி ராஜகுமாரனை திருமணம் செய்திருந்தார்.
இவர்களுக்கு தற்பொழுது இரு பெண் பிள்ளைகள் உள்ளனர்.தேவயானி மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகின்றார். 49 வயதாகும் இவர் தன்னுடைய உடல் மற்றும் முகத்தை எப்படி பளபளப்பாக வைத்திருக்கிறார் என்ற ரகசியம் வெளியாகி வைரலாகி வருகின்றது.
அதாவது தேவயானி குறிப்பிட்ட நேரத்தில் உணவு சாப்பிடுவாராம். Fast Foods அனைத்தையும் தவிர்த்துவிட்டு, அதிக காய்கறிகள் கொண்ட உணவு தான் சாப்பிடுவாராம்.உடலுக்கு தேவையான தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியமாம்.
அதிகளவு தேங்காய் எண்ணெய்யை தனது முகத்தில் பயன்படுத்துவாராம். அது தான் அவருடைய முகத்தின் பளபளப்பிற்கு காரணம் என்கின்றார்.மேலும், தேவையில்லாத பொருட்களை முகத்தில் பயன்படுத்தமாட்டாராம். ஒரே ஒரு சோப் மற்றும் நீண்ட காலமாக ஓரே ஸ்கின் கேர் தான் பயன்படுத்தி வருகிறாராம்.
இதுமட்டுமின்றி தலையில் நன்றாக தேங்காய் எண்ணெய் தேய்த்தபின் தான் குளிப்பாராம்.இது தான் அவருடைய ஸ்கின் கெயார் என்று கூறப்பட்டு வருகின்றது.
Listen News!