• Sep 20 2024

பிரபல நடிகருடன் ஹொட்டலில் தங்கி வந்ததால் செருப்படி பெற்ற நடிகை பவித்ராவிற்கு இந்த நிலமையா?- கை தவறிய படவாய்ப்புகள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கன்னட சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வந்தவர் தான் பவித்ரா லோகேஷ். இவர் கன்னட சினிமாவில் இதுதுவரை 150 படங்களுக்கு மேலே நடித்துள்ளார். அதே போல தமிழில் விஷாலின் அயோக்யா, விஜய் சேதுபதி உடன் க.பெ.ரணசிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அதே போல அண்மையில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான வீட்ல விசேஷம் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர் மனேஷ்பாபுவின் அண்ணனும் நடிகருமான நரேஷ் பாபுவை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக கூறப்பட்டது.

நரேஷ்பாபுவிற்கும் ஏற்கனவே மூன்று திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றன. மேலும் நரேஷை பிரிவதற்கு பவித்ரா தான் காரணம் என்று அவரின் மூன்றாவது மனைவி ரம்யா ரகுபதி தெரிவித்திருந்தார். இந்நிலையில் நரேஷும், பவித்ராவும் மைசூருவில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருப்பதாக தகவல் அறிந்து அவர்கள் தங்கி இருந்த அறையை ரம்யா ரகுபதி முற்றுகையிட்டு ரகளை செய்தார்.

தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து நரேஷையும், பவித்ராவையும் அறையில் இருந்து வெளியே பாதுகாப்பாக அழைத்து வந்தனர்.அப்போது அவர்கள் இருவரையும் ரம்யா ரகுபதி செருப்பால் அடிக்க ஆவேசமாக பாய்ந்தார். போலீசார் குறுக்கிட்டு அடிக்க விடாமல் தடுத்தனர்.

செருப்பால் அடிக்க வந்த ரம்யாவை பார்த்து நரேஷ் விசில் அடித்து கேலி செய்தபடி சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த விவகாரத்தால் பவித்ராவிற்கு பட வாய்ப்புகள் பறி போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது பவித்ரா லோகேஷ் சினிமாவில் அம்மா வேடங்களுக்கு புகழ்பெற்றவர்.

இவர் பல படங்களில் ஹீரோ, ஹீரோயின்களுக்கு அம்மாவாக நடித்துள்ளார். இந்நிலையில் நரேஷ்-பவித்ரா லோகேஷ் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளதால், இரண்டு பெரிய படங்களில் அவரை படக்குழுவினர் நீக்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement