விஜய் டிவியில் அண்ணன் தம்பி பாசத்தை மையமாக வைத்து ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் தற்பொழுது பிரச்சினைகள் ஒவ்வொன்றும் முடிவுக்கு வந்துள்ளது.தனத்திற்கு கான்சர் என்ற விஷயமும் எல்லோருக்கும் தெரிந்து விட்டது.
மேலும் சமீபகாலமாக அரைச்ச மாவையே அரைத்து ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்படும் நிலையில் தான்அந்த தொடர் ஓடிக்கொண்டிருக்கிறது.பாண்டியன் ஸ்டோர்ஸ் விரைவில் முடியப்போகிறது என தகவல் பரவி வரும் நிலையில் தற்போது கிளைமாக்ஸ் எப்படி இருக்கும் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துக்கு இருந்த பிரச்சனைகள் சரியாகி வரும் நிலையில், ஜீவாவின் மாமனார் வில்லன் ஜனார்த்தனன் அவரது இரண்டாவது மருமகனால் பிரச்சனையில் மாட்டி இருக்கிறார்.
அதனால் அவர் பெரிய அளவில் நஷ்டம் ஆகி பணம் இல்லாமல் தவிக்கும்போது, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் வந்து உதவி செய்வது போல தான் கிளைமாக்ஸ் காட்சிகள் இருக்குமாம். அத்தோடு ஜனார்த்தனனும் மனம் மாறுகின்றார் என்றும் கூறப்படுகின்றது.
Listen News!