தமிழ் சினிமாவில் ரி என்ட்ரி கொடுத்து நடித்து வந்த சிம்புவின் கெரியரில் திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் என்றால் மாநாடு தான்.இப்படத்தில் எஸ். ஜே சூர்யாவும் முக்கிய கதாப்பாத்திரத்தில்நடித்திருந்ததோடு இப்படம் வெளியாகி பிளாக் பாஸ்டர் வெற்றி பெற்றது.
100 கோடிக்கு மேல் வசூல் செய்த இப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் கொடுத்துள்ளது. இதனால் இந்த படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய தயாரிப்பாளர்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் மாநாடு படத்தின் அனைத்து மொழி ரீமேக் உரிமையையும் தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சுரேஷ் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் இப்போது மாநாடு படத்தை தெலுங்கில் ரீமேக் செய்வதற்கான வேலைகள் தொடங்கியுள்ளன. இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு ரீமேக்கை தமிழில் இயக்கிய வெங்கட்பிரபுவே இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது அவர் நாக சைதன்யா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்த பின்னர் மாநாடு ரீமேக்கை இயக்குவார் என்றும் கூறப்படுகின்றது.
பிற செய்திகள்
- அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய இளையராஜாவுக்கு விமான நிலையத்தில் கிடைத்த கௌரவம்
- இயக்குநர் மணிரத்தினத்திற்கு கொரோனாத் தொற்று ஏற்படவில்லை- உறுதி செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனை
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!