• Sep 20 2024

ராஜா ராணி 2 சீரியலில் இப்படி ஒரு முடிவா.. கடைசியில் நடந்தது இது தான்..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பரபரப்பாக போய்க்கொண்டிருந்த ராஜா ராணி 2 சீரியல் திடீரென்று முடிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. இவ்வாறுஇருக்கையில்  தற்போது அந்த செய்தி உண்மைதான் என்று சொல்லும் விதமாக கடைசி நாள் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில்  வைரலாக பகிரப்பட்டு வருகிறது.


டிஆர்பி குறைவடைந்ததை தொடர்ந்து ராஜா ராணி சீரியல் திடீரென்று முடிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. இவ்வாறுஇருக்கையில் இதுவரைக்கும் ராஜா ராணி சீரியலில் சந்தியா போலீஸ் அதிகாரியாக பெரும் போராட்டத்திற்கு பின்னர் மாறி இருக்கிறார். தன்னுடைய மாமியார் எத்தனையோ முட்டுக்கட்டை போட்டாலும் அதையெல்லாம் தடை கற்களைத் தாண்டுவது போல தாண்டி கடைசியில் அவர் நினைத்த போலீஸ் ஆபிஸராக மாறி இருக்கிறார்.

எனினும் தற்போது சிவகாமி தன்னுடைய மகள் பார்வதியின் மானத்தை காப்பாற்றுவதற்காக செய்த கொலைக்காக சரவணன் தான் தான் அந்த கொலையை செய்தேன் என்று ஜெயிலில் இருக்கிறார். இந்த நிலையில் சரவணனை சந்தியா எப்படி வெளியே கொண்டு வருவார் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதே நேரத்தில் சீரியலில், அப்போது தற்காப்புக்காக தான் அந்த கொலையை சிவகாமி செய்தார் என்று சந்தியா நீதிமன்றத்தில் நிரூபிக்க இருக்கிறார்.


அதைத்தொடர்ந்து இன்றைய எபிசோட்டில் ஏற்கனவே சந்தியாவிற்கு வாமிட் வருகிறது. எனினும் அதை பார்த்த அர்ச்சனா என்ன ஏதேனும் விசேஷமா என்று கேட்கிறார். அதற்கு சந்தியா சமாளித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கடைசி நாள் சூட்டிங் புகைப்படத்தில் சந்தியா கர்ப்பமாக இருப்பது போன்று இருக்கிறது. இந்த சீரியல் வேறு மொழி சீரியலாக இருப்பதால் அந்தக் சீரியலில் கதையில் சந்தியா தன்னுடைய போலீஸ் வேலையை ரிசைன் செய்து விட்டு குழந்தையை பெற்று எடுப்பார். அதுபோலத்தான் தற்போது சந்தியாவும் முடிவெடுத்து இருப்பார் என்று தெரிய வருகிறது.


ஏற்கனவே இந்த சீரியலில் கதாநாயகி அடிக்கடி மாற்றப்பட்டு வந்தது, இயக்குநர் சீரியலை விட்டு விலகியது என அடுக்கடுக்கான விலகல்களால் இந்த சீரியல் திடீரென்று முடிவுக்கு வரும் நிலையில் அனைவரும் எதிர்பார்த்தபடியே இந்த சீரியலின் சுமுகமான முடிவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Advertisement