தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சியான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் குக்வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் தற்பொழுது 4வது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சியானது அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் நன்றாக சமைத்து டாப் 5ல் முதல் ஆளாக சிவாங்கி சென்றுவிட்டார்.அதை தொடர்ந்து இந்த வாரம் எலிமினேஷன் போட்டி நடைபெற்றது. இதில் இறுதியில் பேஸ் ஆப் குக்கிங்கில் கிரண் மற்றும் ஆண்ட்ரியன் வந்தனர்.இந்த இருவரில் சற்றும் எதிர்பார்க்காத விதமாக ஆண்ட்ரியன் இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.
ஆண்ட்ரியன் எலிமினேஷன் என தெரிந்ததும் அங்கிருந்த அனைவரும் கண்ணீர்விட்டு அழுதனர். ஆண்ட்ரியனும் சற்று கண்கலங்கினார்.முதல் எபிசோடில் இருந்து தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய ஆண்ட்ரியன் எலிமினேஷன் ஆனது சில ரசிகர்களால் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!