தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது சின்னத்திரை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் மகாலக்ஷ்மி கடந்த சில தினங்களுக்கு முன்பாக தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குறித்து பேச்சுக்கள் தான் சோஷியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக பரவி வருகின்றது.
இவர்கள் இருவருக்கும் இது இரண்டாம் திருமணம் என்று பலருக்கும் தெரியாத நிலையில் மகாலக்ஷ்மிக்கு முதல் திருமணத்தின் மூலம் ஒரு மகனும் உள்ளார்.
இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து ஹனிமூன் செல்லாமல் ஒவ்வொரு ஊடகங்களுக்கும் பேட்டி கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் மகாலக்ஷ்மியின் திருமணம் பற்றி தீயாய் பரவி வரும் நிலையில் முதல் முறையாக தனது முதல் திருமணம் ஏன் விவாகரத்தில் சென்றுள்ளது என ரவீந்தர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அதாவது இவர் ஆரம்பத்தில் திரையுலகின் படங்கள் தயாரித்து வருவதிலும் தனது வேலையிலும் பிஸியாக இருந்ததன் காரணமாக தனது மனைியுடன் நேரம் செலவழிக்கவில்லையாம். தான் நஷ்டத்தில் இருக்கும் போது அந்த வேலையை விட்டுவிட்டு வரும் படி கூறியும் நான் அதற்கு சம்மதிக்க வில்லையாம் என கூறியுள்ளார்.
அத்தோடு ரவீந்தர் 2002ஆம் ஆண்டு திருமணம் செய்து 3ஆண்டுகள் மட்டுமே தனது மனைவியுடன் வாழ்ந்துள்ளாராம்.தனது முதல் மனைவியுடன் இந்த பிரச்சனையும் இல்லை.எனக்கு மது அருந்தும் பழக்கமும் இல்லை.என் முதல் மனைவி மீது எந்த பிழையும் இல்லை என கூறியுள்ளார் ரவீந்தர்.
Listen News!