நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் கடந்த அக்டோபர் 19-ந் தேதி திரைக்கு வந்தது.
விமர்சகர்கள் மத்தியில் லியோ படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், ரசிகர்கள் மற்றும் பேமிலி ஆடியன்ஸுக்கு இப்படம் மிகவும் பிடித்துப் போனதால், பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்து வருகிறது லியோ. இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.148 கோடி வசூலித்து இருந்தது.
இப்படம் 6 நாட்களில் அந்த சாதனையை எட்டிப்பிடித்து உள்ளது. இதுவரை உலகளவில் லியோ திரைப்படம் 6 நாட்களில் ரூ.440 கோடி வசூலித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் விஜய்யின் கெரியரில் அதிக வசூல் செய்த படமாக லியோ மாறி உள்ளது.
மேலும் முதல் நாள் வசூல் விவரம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். ஆனால் அதன் பின்னர் எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளனர்.இதனால் இதற்கான காரணம் குறித்து வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் விஜய் தான் தினமும் வசூல் அறிவிப்பை வெளியிட வேண்டாம் என்றும் மொத்தமாக ஒரு வாரம் கழித்து வெளியிடுங்கள் என தயாரிப்பு நிறுவனத்துக்கு கட்டளை போட்ட நிலையில், அதை கருத்தில் கொண்டு இரண்டாம் நாள் உள்ளிட்ட இதுவரை 6 நாட்கள் கடந்தும் எந்தவொரு அறிவிப்பையும் தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கமல் இருக்க காரணம் என்கின்றனர்.
இதையெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு? என்று விஜய் ஹேட்டர்கள் கலாய்த்து வருகின்றனர். வெளிநாடுகள் மற்றும் தமிழ்நாட்டை தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து எல்லாம் லியோ வசூல் நிலவரம் வெளியாகி வரும் நிலையில், படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருவது உண்மை தான் என்று கூறும் நிலையில், வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏன் அறிவிக்க தயங்குகின்றனர் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
Listen News!