நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் இரு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் தற்போது 16 போட்டியாளர்கள் இருக்கின்றார்கள். அதில் ஜோவிகா விஜயகுமாரும் ஒருவர்.
இந்நிலையில் ஜோவிகா பற்றிய உண்மைகளை பேசியுள்ளார் நடிகை கஸ்தூரி ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வர அவரது அம்மா தான் காரணம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களுடன் கலந்து பேசியும் கெஞ்சி கூத்தாடி தான் மகளுக்கு வாய்ப்பை வாங்கி கொடுத்திருக்கிறார் வனிதா என்று உண்மையை உடைத்துள்ளார் நடிகை கஸ்தூரி. இதேபோல் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்றும் கூறியிருக்கிறார். அதோடு படிப்பு பற்றி ஜோவிகா பேசியது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்திருக்கிறார்.
Listen News!