இந்திய நடிகரும் திரைப்பட இயக்குநருமான நடிகர் சமுத்திரக்கனி தமிழ் திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் தற்போது தெலுங்கு திரைப்படங்களிலும் கமிட்டாகி மிகவும் பிசியாக உள்ளார்.தற்போது மீண்டும் அவர் நடிப்பில் புதிய படம் செப்டெம்பர் மாதம் ரிலீஸ் ஆகஉள்ளது .
சமுத்திரக்கனி நாடோடிகள், போராளி,நிமிர்ந்து நில் ,அப்பா போன்ற படங்களை இயக்கியுள்ளார். மேலும் காலா ,அப்பா போன்ற நிறைய படங்களில் நடித்துள்ளார். கதாநாயகனாக மட்டும் இல்லாமல் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இப்படி தமிழ் திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த இவர் தற்போது தெலுங்கு திரைப்படங்களில் கமிட்டாகி மிகவும் பிசியாக இருக்கிறார்.
அதற்கு காரணம் தெலுங்கு திரை படங்களில் அவர் கேட்கும் சம்பளத்தை தருகிறார்களாம். அத்தோடு ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரை நல்ல விதமாக கவனிக்கிறார்களாம். இந்த இரண்டு விடயங்கள் அவருக்கு மிகவும் பிடித்துப்போகவே தற்போது தெலுங்கு படங்களில் நடிப்பத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்.
அத்தோடு அவர் தற்போது தமிழில் நடித்துள்ள திரைப்படம் '' ஆர் யூ ஓகே பேபி '' . இந்த திரைப்படத்தை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ளார் மற்றும் சமுத்திரக்கனி, அபிராமி மற்றும் ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மேலும் பல முன்னணி நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். 2023. செப்டெம்பர் 22 -ஆம் திகதி அன்று இத்திரைப்படம் வெளிவரவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!