தமிழ் சினிமாவில் முக்கிய பாடலாசிரியராக வம் வருபவர் தான் கபிலன். இவர் இதுவரை 100க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.புதுவையை பூர்வீகமாக கொண்ட இவர் விக்ரம் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான, தில் படத்தில் இடம்பெற்ற 'உன் சமையல் அறையில்'பாடலை எழுதியன் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகினார்.
இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அந்த வருடமே நரசிம்மா, அல்லி தந்த வானம், தவசி போன்ற படங்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பைப் பெற்றார். மேலும் இவர் வரிகளில் வெளியான, சகலா கலா வல்லவனே... ஆல்தோட்ட பூபதி நானடா.. ஆசை ஆசை இப்பொழுது, கண்ணம்மா கண்ணம்மா மீனு வாங்க போலாமா போன்ற பாடல்கள் வேற லெவலுக்கு ஹிட் லிஸ்டில் இடம்பிடித்தது.
இது தவிர விரைவில் வரவிருக்கும் பாடங்களான... பிசாசு, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார். கபிலன் தற்போது தன்னுடைய குடும்பத்தோடு சென்னை அரும்பாக்கம் ஏ.டி.எம் காலனியில் வசித்து வருகிறார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக, கபிலனின் மகள் தூரிகை, தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து தற்போது இவரது உடலை கைப்பற்றிய போலீசார் உடல்கூறாய்வு பரிசோதனைக்காக, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இவரது மரணம் குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!