• Sep 20 2024

இறைவன் திரைப்படத்தின் வசூல் இப்படி மோசமாகப் போனதற்கு இது தான் காரணமா?- இதெல்லாம் ஒரு காரணமாப்பா?

stella / 11 months ago

Advertisement

Listen News!

தனி ஒருவன் படத்துக்குப் பிறகு நயன்தாராவும் ஜெயம் ரவியும் இணைந்து நடித்த திரைப்படம் தான் இறைவன். இந்தத் திரைப்படம் சில தினங்களுக்கு முதல் திரையரங்குகளில் வெளியாகியது.சைக்கோ த்ரில்லர் கதையாக உருவாகியிருந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

மேலும் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியும் சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் சிறப்பாக பங்கேற்ற ஜெயம் ரவி, அதிரடியான பல விஷயங்களை பேசினார். இதனால் இறைவன் படம் மிகச்சிறப்பான வசூலையும் வரவேற்பையும் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.


இந்நிலையில் இந்தப்  படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய ஜெயம் ரவி, குழந்தைகளுடன் படத்தை பார்க்க வராதீர்கள் என்று மக்களிடம் பேசினார். இதை குறிப்பிடுவதற்குதான் படத்திற்கு சென்சார் வழங்கப்படுகிறது. இந்நிலையில், இதை தனியாக குறிப்பிட்டு சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதே தயாரிப்புத் தரப்பினரின் கேள்வியாக உள்ளது.

 படத்தின் நாயகனே இப்படி பேசியதால், படத்திற்கு ரசிகர்களின் கூட்டம் குறைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்ட போது, ஜெயம் ரவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, 3 மாதங்கள் படத்தின் சூட்டிங் தள்ளிப் போனது. இதையடுத்து நயன்தாராவின் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளால் படத்தின் சூட்டிங் தள்ளிப் போனது. 


இதனால் படத்தின் ரிலீஸ் தேதியிலும் மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஜெயம் ரவி இப்படி பேசியதும் படத்தின் வெற்றிக்கு தடையாக அமைந்ததாக தற்போது தயாரிப்பு தரப்பிற்கு வருத்தத்தை அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement