தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒருவரே நடிகை வாணி போஜன். இவர் சன் டீவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான 'தெய்வமகள்' என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியிருந்தார். அதையடுத்து 'லட்சுமி வந்தாச்சு' என்ற சீரியலில் நடித்தார். அதையடுத்து 'கிங்ஸ் ஒப் காமெடி 2' நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.
இவ்வாறாக சின்னத்திரையில் பிஸியாக நடித்து வந்த இவர் 2020-ஆம் ஆண்டு வெளியான 'ஓ மை கடவுளே' என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே மீரா என்ற கதாபாத்திரம் மூலம் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்தார். பின்னர் 'லாக் அப், மலேசியா டூ அம்னீசியா' ஆகிய படங்களில் நடித்தார்.
சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு வந்த வாணி போஜனுக்கு தொடர்ந்தும் அதிகளவிலான திரைப்படங்களின் வாய்ப்புக்கள் வந்து குவிந்தன.மேலும் விக்ரம் நடிப்பில் வெளியான 'மகான்' திரைப்படத்தில் வாணி போஜன் நடித்திருந்தாலும் அப்படத்திலிருந்து அவரின் காட்சிகள் நீக்கப்பட்டன.
எனினும் இதற்கிடையே அவர் நடிப்பில் தமிழ் ராக்ர்ஸ் என்ற வெப் சீரிஸ் வெளியாகி இருக்கிறது. இதனை விளம்பரப்படுத்தும் வகையில் நடிகை வாணி போஜன் சமீபத்தில் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அப்பேட்டியில் அவர் பேசும் போது " ஆரம்பத்தில் பட வாய்ப்புக்காகத்தான் மிகவும் கஷ்டப்பட்டேன், பல ஆடிஷனுக்கு சென்றேன், அப்போது சீரியலில் கிடைத்த வரவேற்பால் பல வாய்ப்புகள் கிடைத்தன" எனக் கூறியிருந்தார்.
எனினும் தொடர்ந்து அவர் பேசுகையில் "எனக்கு பட வாய்ப்புக்கள் கிடைத்தாலும் பல நடிகர்கள் சீரியல் நடிகையா? என்று என்னை தூக்கி எறிந்தனர்" என மிகவும் உணர்ச்சிபூர்வமான தொனியில் கூறியிருக்கின்றார். இவரின் இந்தப் பேச்சானது தற்போது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!