• Sep 21 2024

நடிகர் சீமானின் மகனுக்கு திடீரென வாழ்த்துத் தெரிவித்து கவிதை எழுதிய வைரமுத்து-அடடே இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனது கவிதையினாலும் பாடல் வரிகளினாலும் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கிய முக்கிய கவிஞராக வலம் வருபவர் வைரமுத்து. இவர் சினிமாவில் மட்டுமல்லாது சமூக சேவையாற்றி வருபவர்களை கௌரவிக்கும் விதமாகவும் பல கவிதைகளை எழுதி வருகின்றார்.

இந்த நிலையில் பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான சீமான் முன்னாள் அதிமுக அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் உள்ளார் .

அந்த வகையில் சீமானின் மகன் வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை என்ற புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த வீடியோவை பார்த்த வைரமுத்து, சீமான் மகனுக்கு வாழ்த்துக் கூறியுள்ளார்.

அந்த வாழ்த்துக் கவிதையில் கூறியிருப்பதாவது
காளிமுத்து பேரன்
செந்தமிழன் சீமானின்
திருச்செல்வன் மாவீரன்
தமிழாற்றுப்படையோடு
உறவாடி விளையாடும்
ஒளிப்படங்கள் கண்டேன்.

நாளையொரு பூமலர
நல்லதமிழ்த் தேன்சிதற
வாழையடி வாழையென
வளருமடா தமிழ்க்கூட்டம்
என்று வாய்விட்டுச்
சொல்லிக்கொண்டேன்
தமிழாற்றுப்படையோடும்
தமிழர் படையோடும்
வா மகனே! என்றும் பதிவிட்டிருப்பதையும் காணலாம்.

Advertisement

Advertisement