• Sep 20 2024

விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தின் கதை இதுதானா .? வெளியான சூப்பர்தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் சைன்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் உருவாக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன

 அஜித்தின் 62 ஆவது திரைப்படத்தை இயக்குவதாக இருந்த விக்னேஷ் சிவனை அப்படத்திலிருந்து அதிரடியாக நீக்கிவிட்டனர்.அத்தோடு  கடந் ஆண்டே அஜித் மற்றும் விக்னேஷ் சிவனின் கூட்டணியில் AK62 திரைப்படம் உருவாவதாக இருந்தது. ஆனால் அவரின் கதையில் உடன்பாடில்லை என்ற காரணத்தினால் விக்னேஷ் சிவனை லைக்கா மற்றும் அஜித் நீக்கிவிட்டனர்.

இதன் காரணமாக பல ட்ரோல்களை விக்னேஷ் சிவன் சந்தித்தார். அத்தோடு  அஜித்தின் படத்தை இயக்கும் வாய்ப்பு பறிபோனதை அடுத்து மன உளைச்சலுக்கு ஆளான விக்னேஷ் சிவன் அடுத்ததாக ஒரு ஹிட் படத்தை கொடுத்து தான் யார் என நிரூபிக்கும் கட்டத்தில் இருக்கின்றார்.

இவ்வாறுஇருக்கையிலட விக்னேஷ் சிவன் ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமலின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார் என தகவல்கள் வந்தது. அத்தோடு வித்யாசமான காதல் கதையை உருவாக்கியுள்ள விக்னேஷ் சிவன் கமலிடம் கதை கூறி ஓகே செய்துள்ளார். மேலும் ஹீரோவாக லவ் டுடே படத்தில் நடித்து பிரபலமான பிரதீப் ரங்கநாதன் கமிட்டாகி இருப்பதாகவும் தகவல்கள் வந்தன

மேலும் இப்படம் விக்னேஷ் சிவன் இயக்கிய படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக இருக்குமாம். இவ்வாறுஇருக்கையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்கும் என்றும், இப்படத்திற்கு விக்னேஷ் சிவனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்க இருக்கின்றார் என்பதும் உறுதியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இப்படத்தில் மிக முக்கியமான ரோலில் நடிக்க இருக்கின்றார். இவ்வாறுஇருக்கையில் இப்படத்தின் கதை பற்றிய தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. காதலுக்காக ஹீரோ மொபைல் வழியே டைம் ட்ராவல் செய்வது தான் இப்படத்தின் ஒரு வரி கதையாம்.

சைன்ஸ் பிக்ஷன் படமாக உருவாகும் இப்படம் ரசிகர்களுக்கு வித்யாசமான அனுபவத்தை கொடுக்கும் என பேசப்பட்டு வருகின்றது. எனினும் தற்போது கட்டாயம் ஒரு வெற்றி தேவை என்ற கட்டத்தில் இருக்கும் விக்னேஷ் சிவன் தன் பாணியில் ஒரு படத்தை உருவாக்க இருக்கின்றார். எனவே இதன் மூலம் விக்னேஷ் சிவன் எதிர்பார்த்த வெற்றியை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்தோடு  லேட்டஸ்ட் சென்சேஷ்னல் ஹீரோவான பிரதீப் ரங்கநாதன் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக வலம் வருவதால் இப்படத்திற்கு இளைஞர்களின் ஆதவரும் இருக்கும், அதே சமயத்தில் விக்னேஷ் சிவனுக்காக மட்டுமல்லாமல் தனக்கு ஏற்ற கதாபாத்திரம் என்பதால் நயன்தாரா இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். எனவே அனைத்தும் பாசிட்டிவாக இருப்பதால் இப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய அளவில் வெற்றிபெறும் என சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement