• Sep 20 2024

விஜய்யின் 'லியோ' பட கதை இது தானா..? வெளியான சூப்பர் அப்டேட்..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

'லியோ' படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'நா ரெடி' பாடலை விஜய்யே பாடியிருந்தார். லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநராக விஷ்ணு எடவன் இந்தப்பாடலை எழுதியிருந்தார்.

இந்தப்பாடலை தான் அண்மையில் சென்னையில் படமாக்கினார்கள். கிட்டத்தட்ட 2000 நடன கலைஞர்களை வைத்து இந்தப்பாடலை பிரம்மாண்டமாக படக்குழு உருவாக்கியுள்ளதாக கூறப்பபடுகிறது. விஜய்யின் ரசிகர்களும் இந்தப்பாடலை கொண்டாடி வருகிறார்கள். அத்துடன் யூடிப்பில் 'நா ரெடி' பாடல் சாதனை படைத்து வருகிறது.

இந்த வரவேற்புக்கு மத்தியில் ஏராளமான சர்ச்சைகளையும் கிளப்பி வருகிறது 'லியோ' பர்ஸ்ட் சிங்கிள் பாடல். இந்தப்பாடலில் அதிகளவில் புகைபிடிப்பது போன்ற காட்சிகளில் விஜய் நடித்துள்ளதிற்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றனர் இதனால் 'நா ரெடி' பாடல் பலவித சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.

இந்நிலையில் 'லியோ' படம் கதைக்களம் குறித்த மிரட்டலான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்தப்படம் குறித்து பேசியுள்ள விஜய்யின் நண்பரும் இயக்குநருமான ரத்னகுமார், 'லியோ' படத்தில் அப்பாவி குடும்ப தலைவராகவும் அதிரடி கேங்ஸ்டராகவும் விஜய் இரண்டு கேரக்டர்களில் நடித்துள்ளதாக கூறியுள்ளார். இவர் லோகேஷ் கனகராஜின் மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ' படங்களில் வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'லியோ' படத்தில் கேஜிஎப் வில்லன் சஞ்சய் தத் நடிக்கிறார். மேலும் பிரபல இயக்குந் ர்கள் மிஷ்கின், கெளதம் மேனன், திரிஷா, மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். 'லியோ' படத்தில் விஜய் சம்பந்தமான காட்சிகளுக்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement