சோழப் பேரரசின் அரியணையில் நடந்த போராட்டங்கள் சாதனைகள் தியாகங்கள் போன்றவற்றை வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தை இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.
இதில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர். மேலும் சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி மற்றும் வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலா நடிக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபு, பிரபு, மற்றும் நடிகர் லால் ஆகியோரின் தோற்றங்கள் மற்றும் கேரக்டர் விபரங்கள் மோஷன் மோஸ்டராக வெளியாகியுள்ளன. அதன்படி பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கேரக்டர்களாகிய பெரிய வேளாளராக பிரபுவும், பார்த்திபேந்திர பல்லவனாக விக்ரம் பிரபுவும், மலையமானாக நடிகர் லாலும் நடிக்கின்றனர்.
மேலும் இப்படமானது வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி வெளியாகவுள்ளதோடு இப்படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர் ரகுமான் இசையமைப்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!