தமிழ் சின்னத்திரையில் ஷு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி என்ற சீரியலில் கார்த்தியை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு வில்லியாக நடித்தவர் பரதா நாயுடு.இந்த சீரியல் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது.
தொடர்ந்து இவர் தற்பொழுது சன்டிவியில் ஒளிபரப்பாகும் தாலாட்டு என்னும் சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.இவருக்கு கடந்த வருடம் திருமணமான நிலையில் கர்ப்பமாக இருந்து வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னால் தான் ஒரு அழகிய குழந்தையை பெற்றெடுத்திருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார்.இந்த நிலையில் இவர் பிரசவ வலியில் கொடுத்த வீடியோவை இணையத்தை வெளியிட இதுதான் தாய்மை என ரசிகர்கள் பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!