விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக பலருடைய மனதை கவர்ந்த ரித்திகா ஏற்கனவே விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். எனினும் குறிப்பாக ராஜா ராணி சீரியலில் அறிமுகமாகி இருந்த ரித்திகா நடிப்பதற்கு ஆரம்பத்தில் ஆசைப்படவே இல்லையாம்.
மேலும் ஒரு தொகுப்பாளராக வரவேண்டும் என்று ஆசைப்பட்ட ரித்திகாவிற்கு நடிக்க வாய்ப்பு கிடைத்த பின்னர் முதலில் மறுத்தாலும் அதன் மூலம் தனக்கு கிடைக்கும் வரவேற்பு மற்றும் ரசிகர்களின் அன்பை பார்த்து தான் மீண்டும் நடித்துக் கொண்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். எனினும் இந்த நிலையில் இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் முடிந்தது.
ரித்திகா விஜய் டிவியில் வேலை செய்யும் வினோத் என்பவரை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறுஇருக்கையில் இவருடைய அழகு குறித்து பலரும் இவரிடம் அழகு குறிப்பு கேட்டுக் கொண்டிருக்கின்றனர். போகும் இடம் எல்லாம் இவரிடம் இதே கேள்விதான் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் பேட்டியில் அதற்கான ரகசியம் என்னவென்று தெரிவித்து இருக்கிறார்.
ரித்திகா ஸ்கின் பளபளப்பாக இருப்பதற்கு காரணம் தக்காளி ஜூஸ் தானாம். தினமும் தவறாமல் தக்காளி ஜூஸ் குடிப்பதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதோட ஸ்கின் டேமேஜ் ஆகாமல் இருக்க காரணம் அதிக மேக்கப் பொருட்களை பயன்படுத்த மாட்டாராம்.
அத்தோடு சூட்டிங் இல்லாத நேரத்தில் அல்லது வெளியிடங்களுக்கு செல்லும்போது கூட மேக்கப் போடாமல் வெறும் மாய்ஸ் ரைசர் மட்டும்தான் பயன்படுத்துவாராம். அதுபோல பார்லர் செல்வது பேசியல், பிலிச்சிங் போன்ற பழக்கங்களும் ரித்திகாவிற்க்கு கிடையாதாம். எனினும் அதற்குப் பதில் வீட்டிலேயே தயிர் சேர்த்த ஹெர்பல் பேஸ் பேக்கில் தான் போடுவாராம்.
அதோடு ஆரஞ்சு தோலை வீட்டிலேயே காய வைத்து நன்கு பொடியாக்கி அந்த பவுடரை முகத்தில் இரவு நேரத்தில் பாலுடன் சேர்த்து அப்ளை செய்வாராம். இதனால் முகம் இயற்கையாகவே பிரகாசமாக மாறிவிடும் என்று கூறியிருக்கிறார். அதோடு தினமும் இளநீர் குடிப்பது ரித்திகாவின் வழக்கமாக இருக்கிறதாம். அத்தோடு இளநீர் தினமும் குடிப்பதால் வயிற்றை குழுமையாக்கி முகத்திற்கு ஒரு விதமான குளோ கிடைக்கும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.
Listen News!