• Sep 20 2024

நடுவீட்டுக்குள் புதுமருமகளுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட விஜயா- அதிர்ச்சியில் உறைந்த அண்ணாமலை- Siragadikka Aasai Serial-ல் இனி நடக்கப்போவது இது தானா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் சில இளம் கலைஞர்கள் நடிக்க வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் சிறகடிக்க ஆசை.அண்மையில் புதியதாக தொடங்கப்பட்ட இந்த தொடர் இப்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

அதாவது கதைக்களத்தில் விறுவிறுப்பு ஏற்பட ரசிகர்களும் தொடருக்கு நல்ல ஆதரவு கொடுக்கிறார்கள்.அதிலும் இந்த சீரியலின் ஜோடிக்கு மக்கள் நல்ல ரேட்டிங் கொடுத்து வருகிறார்கள்.

இந்த சீரியலின் கதைப்படி கந்து வட்டிக்காரன் செய்த வேலையால் முத்து தனது வண்டிக்கு பணம் கட்ட முடியாமல் தவிககின்றார். இதனால் கடன் கொடுத்தவர்களிடம் எல்லாம் திட்டு வாங்கியதோடு குடித்து விட்டு வீட்டுக்குச் சென்று அலப்பறையைப் போட்டிருந்தார்.


மறுபுறம் மனோஜ் ரோகினியைக் காரில் ஏற்றிக் கொண்டு ஜாலியாக ஊர் சுற்றி வருகின்றார். இதனால் ரோகினி பற்றிய உண்மைகள்எப்போது வெளி வரும் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

இப்படியான நிலையில் இனி வரும் நாளில் நடக்க இருப்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ரோகினியும் விஜயாவும் நடுவீட்டுக்குள் நின்று நடனம் ஆடுகின்றனர். இதனைப் பார்த்த அண்ணாமலையும் மீனாவும் அதிர்ச்சியடைகின்றனர். இதனால் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement