நடிகர் விஜய் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் ஷுட்டிங் அண்மையில் தான் முடிவடைந்ததோடு இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இப்படத்தை் தொடர்ந்து விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அண்மையில் வெளியாகியிருந்தது.லியோ படத்துக்காக விஜய்க்கு 135 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. படத்தின் ப்ரீ பிஸ்னெஸ்ஸோ 450 கோடி ரூபாயை நெருங்கிவிட்டதவும் கூறப்படுகின்றது.
மேலும் 68ஆவது படத்துக்கான சம்பள பேச்சுவார்த்தையை 175 கோடி ரூபாயிலிருந்துதான் ஏஜிஎஸ் நிறுவனம் தொடங்கியதாகவும்; நிச்சயம் 175 கோடி ரூபாய் சம்பளம் விஜய் பெறுவார் என்றும் பரபரப்பாக பேசப்பட்டது. அது உண்மையாகும்பட்சத்தில் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோ என்ற பெயரை விஜய் பெறுவார்.
இந்நிலையில் மன்சூர் அலிகானை விடவும் விஜய் குறைவான சம்பளம் வாங்கிய சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது கடந்த 1996ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் வசந்தவாசல். இதில் மன்சூர் அலிகான் வில்லனாக நடித்திருந்தார். அந்தப் படத்தில் மன்சூர் அலிகானுக்கு நான்கு லட்சம் ரூபாய் சம்பளமாம்.
அதேசமயம் விஜய்க்கோ இரண்டு லட்சம் ரூபாய்தான் சம்பளமாம். இந்தத் தகவலை மன்சூர் அலிகான் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார். விஜய்யுடன் அவர் தற்போது லியோ படத்தில் நடித்திருக்கிறார்.இதனால் விஜய்யின் வளர்ச்சியைப் பார்த்து ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!