• Sep 20 2024

கணவரைக் காப்பாற்ற முக்கிய முடிவெடுத்த ஈஸ்வரி- அவமானத்தால் கதறி அழும் குணசேகரன்- எதிர்பாராத திருப்பங்களுடன் எதிர்நீச்சல் சீரியல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்றுதான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது ரசிகர்களின் விறுவிறுப்பைத் தூண்டியவாறு அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது.அதாவது ஜீவானந்தம் குணசேகரினன் சொத்தை அபகரித்ததால் அந்த சொத்தை எப்படி மீட்பது என்று தெரியாமல் குணசேகரன் தவிக்கின்றார்.

இதனால் குணசேகரனுக்கு நெஞ்சுவலி வந்ததோடு குணசேகரனை ஹாஸ்பிட்டலில் கதிரும் கரிகாலனும் கொண்டு போய் சேர்த்திருந்தனர். குணசேகரனுடைய சொத்தை ஜனனி மீட்கப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பே ரசிகர்களிடம் அதிகமாக இருந்தது.


இப்படியான நிலையில் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் கௌதம் கிட்ட பேசி ஜீவானந்தத்தை சந்திக்க முடியாதா என்று ஜனனியிடம் ஈஸ்வரி கேட்கின்றார். அதற்கு ஜனனி என்னால் முடியாது அக்கா என்று சொல்ல அதற்கு ஈஸ்வரி நான் பேசிக் கொள்கிறேன் என்று கூறுகின்றார்.

மறுபுறம் கண்முழித்த குணசேகரன் என்னை எப்பிடிடா ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு வந்தீங்க என்று கேட்க கரிகாலன் டூவீலர்ல தான் கொண்டு வந்தோம் எவ்வளவு பெரிய கோடீஸ்வரன் நீ  உன்னுடைய நிலமையைப் பார்த்தியா மாமா என்று சொல்ல குணசேகரன் அதற்கு என்னுடைய மானத்தை வாங்கிட்டீங்களேடா என்று அழுகின்றார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement