• Sep 20 2024

பாக்கியா காலேஜிற்கு போவதை அறிந்த ஈஸ்வரி எடுத்த முடிவு- இனியாவை நக்கலடித்த எழில்- அதிர்ச்சியில் ரமமூர்த்தி

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

இனியா,பாக்கியாவிடம் நீ காலேஜிற்குப் போகப்போற விஷயத்தை பாட்டிக்கிட்ட சொன்னால் நீ எப்பிடி வருவ சொல்லட்டுமா என்று கேட்க,பாக்கியா எப்பிடியும் இன்னும் கொஞ்ச நேரத்தில வீட்டில தெரியத் தான் போகுது போய் சொல்லு போ என்று சொல்ல இனியா இன்ன செய்வதென்று தெரியமல் முழிக்கின்றார்.


அப்போது அங்கு வரும் ஈஸ்வரி எதுக்கு அம்மா கிட்ட கோபப்படுற, இப்பிடி கோபப்படலாமா தினமும் என்கூட வந்து தியானம் பண்ணு என்று அட்வைஸ்ட் பண்ணுகின்றார்.இதைக் கேட்ட எழில் இனியாவைப் பார்த்து சிரிக்கின்றார்.

தொடர்ந்து எல்லோரும் சாப்பிடுவதற்காக இருக்கும் போது ஈஸ்வரி மதியம் தனக்கு காய்கறி சமைக்கும் படி சொல்ல, பாக்கியா சிக்கன் சமைத்து வைத்திருப்பதாக சொல்ல ஈஸ்வரி அசைவம் இனிமேல் சாப்பிடக் கூடாது என்று சொல்கின்றார்.இதைக் கேட்ட எல்லோரும் அதிர்ச்சியடைய எழில் என்னால எல்லாம் அசைவம் மட்டும் சாப்பிட்டுக் கொண்டு இருக்க முடியாது என்று சொல்கின்றார்.


அதற்கு ஈஸ்வரி நீங்க அசைவம் சாப்பிடுங்க நான் காய்கறி தான் இனிமேல் சாப்பிடுவேன் என்று சொல்கின்றார். எனக்கு நானே சமைச்சுச் சாப்பிடுகின்றேன் என்று சொல்ல எல்லோரும் ஆச்சரியப்படுகின்றார். பின்னர் சாப்பிட்டு முடித்ததும் ஈஸ்வரி பேசிட்டு இருக்கும் போது அங்கு எழில் பாக்கியா யூடியூப் சேனல் ஒன்றில் பேசியதாக வீடியோ ஒன்றைக் கொண்டு வந்து காட்டுகின்றார்.

அதில் பாக்கியா ஈஸ்வரி பற்றி பெருமையாக பேசி இருப்பதோடு அத்தை தன்னை காலேஜில் சேருவதற்கு சம்மதிப்பாங்க என்று சொல்ல, அதைப் பார்த்த ஈஸ்வரி பாக்கியாவை அழைத்து காலேஜ்ல சேர்ந்திட்டியா என்று கேட்க பாக்கியா உங்களுக்கு பிடிக்கல என்றால் போகல என்று சொல்ல ஈஸ்வரி, நீ போய் படிச்சு பெரிய ஆளாக வா என்று ஆசீர்வதிக்கின்றார்.


பின்னர் எழில் பாக்கியாவுடன் சேர்ந்து ஈஸ்வரியையும் வைத்து வீடியோ எடுக்கின்றார். இதைப் பார்த்து இனியா கடுப்பாகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைவதைக் காணலாம்.

Advertisement

Advertisement