• Sep 20 2024

காசியில் இருந்து சாமியாராக வந்த ஈஸ்வரி- அதிர்ச்சியில் உறைந்த ராமமூர்த்தி- செம குஷியில் இருக்கும் பாக்கியா

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

இனியா முதல் முறையாக காலேஜிற்கு போவதற்காக ரெடியாகி கீழே வந்து நிற்கும் போது கோபி இனியாவை காலேஜிற்கு கூட்டிட்டு போவதற்காக வந்திருக்கின்றார். அத்தோடு இனியாவை அழைத்து காலேஜிற்கு போகலாம் வா என்று சொல்லும் போது இனியா, எழில் கூட பைக்ல போகப்போறேன் என்று சொல்ல கோபி அதெல்லாம் வேணாம் என் கூட கார்ல வா என்று கூட்டிட்டு போகின்றார்.


பின்னர் ராதிகா, கோபியிடம் போன் பண்ணி சீக்கிரம் வரச்சொல்ல அவரது அம்மா வந்து என்னாச்சு என்று கேட்க, கோபி இனியாவை பெஸ்ட் டே என்பதால் காலேஜில் விடப்போயிருக்கிறார் என்று சொல்ல அவரது அம்மா திட்டுகின்றார். இவங்க இரத்த உறவு எப்ப வேணும் என்றாலும் சேர்ந்துப்பாங்க நீ தான் கவனமாக இருக்கனும் என்று சொல்கின்றார்.

பின்பு காலேஜில் எழிலுடன் பாக்கியா பேசிட்டு இருக்கின்றார். உன்னால தான் என்னுடைய கனவு நினைவாகி இருக்கு என்று பாராடடுகின்றார். பின்னர் இனியா தன்னுடைய நண்பர்களுடன் பேசிட்டு இருப்பதைப் பார்த்து தானும் போய் பேசிட்டு இருக்கின்றார். அப்போது தானும் இந்த காலேஜில் தான் படிக்க வந்திருக்கிறேன் என்று சொல்கின்றார். இதைக் கேட்டு இனியாவின் நண்பர்கள் ஆச்சரியத்தில் சிரிக்கின்றனர்.


பின்னர் கோபி வந்து இனியாவை வீட்டுக்கு கூட்டிட்டு போகின்றார். மறுபுறம் ராம மூர்த்தி ஈஸ்வரி வீட்டிற்கு வரப்போவதை நினைத்து சந்தோசப்படுகின்றார். அந்த நேரம் செழியன் வந்து பாட்டி வந்திட்டாங்க ஆனால் எப்பிடி வந்திருக்கிறாங்க பாருங்க என்று சொல்கின்றார். இதனால் ஜெனியும் ராமமூர்த்தியும் வெளியில் சென்று பார்க்கும் போது ஈஸ்வரி சாமியார் வேஷத்தில் வந்திருக்கின்றார். இதைப் பார்த்த இவர்கள் அதிர்ச்சியடைகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement