தமிழ் சினிமாவில் குணச்சித்திர மற்றும் காமெடி வேடங்களில் நடித்து அசத்துபவர் தான் சுமதி. அதிலும் குறிப்பாக, நடிகர் வடிவேலுவுடன் சுமதி இணைந்து நடித்துள்ள காமெடி காட்சிகள், இன்றளவிலும் ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலைகளை ஏற்படுத்த கூடியவை.
நடிகை சுமதி சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.அதில் தனிப்பட்ட வாழ்க்கையில் பட்ட பல்வேறு கஷ்டங்கள் குறித்தும் உணவில்லாமல், உடையில்லாமலும் சிறுவயதில் பட்ட கஷ்டம் பற்றியும் பல உருக்கமான விஷயங்களை பேசி இருந்தார்.
மேலும் இந்த பேட்டியில் ரஜினி சார் தன்னை ஒரு முறை பாராட்டியது பற்றி பேசி இருந்த நடிகை சுமதி, "EVP -ல பேட்ட படத்தோட செட்டு போட்டு எடுத்துட்டு இருந்தாங்க. நான் பேக்ரவுண்ட் எல்லாம் போயிட்டு இருந்தோம். அப்ப ரஜினி சார் வந்ததும் நாங்க அவரை விஷ் பண்ண போனோம். எனக்கு முன்னாடி ஒரு நாலு பேரு விஷ் பண்ணிட்டு இருக்காங்க. நான் அப்படியே விஷ் பண்ணிட்டு அங்க நிற்கிறேன்.
அவர் அவ்வளவு தூரம் போயிட்டு திரும்பி ரிட்டர்ன் வர்றாரு. திரும்ப வந்து என் முகத்தை நல்லா இப்படி பார்த்துட்டு, தோள் மேல தட்டி, ' என்ன ஒரு காமெடி, என்ன ஒரு வில்லத்தனம், என்ன ஒரு பெர்ஃபார்மென்ஸ். சூப்பர், நல்லா பண்ணுங்க' என பாராட்டினார். எனக்கு அந்த இடத்துல உயிரே போனால் கூட பரவாயில்லை. அப்படின்னு இருந்தது எனக்கு. அவ்ளோ பெரிய ஹீரோ அவர் வந்து அப்படி பேசுறார்ன்னா நான் அவரு மனசுல நிக்குறோம்ல" என கூறினார்.
Listen News!