• Sep 21 2024

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபுதேவா... அதுவும் இந்தப் பெண்ணுடனா... வெளியான உண்மை..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் பிரபுதேவா. இவர் நடிகர் மட்டுமல்லாது சிறந்த நடனப்புயலும் கூட.

சமீபகாலமாக பிரபுதேவா பற்றிய தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில் தற்போது ஜெயந்தி கண்ணப்பன் அவர்கள் பிரபுதேவாவின் திருமண வாழ்க்கை பற்றி பேசிய விடயங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வண்ணம் இருக்கின்றன. 


அதாவது, திரைப்படத்திற்கு வேண்டிய அத்தனை அம்சங்களும் அவருக்கு பொருந்தி இருக்கிறது. மேலும் பிரபு தேவாவின் படங்கள் வெளியாகும் போது எல்லாம் பெரிய பெரிய நட்சத்திரங்கள் கூடி பயப்பிடுவார்கள். அதற்கு காரணமே பிரபுதேவா டாப் இற்கு உயர்ந்து விடுவார் என்பது தான் எனப் பிரபுதேவா குறித்து மிகவும் பெருந்தன்மையுடன் பேசியிருக்கின்றார் ஜெயந்தி கண்ணப்பன்.


மேலும் "பிரபுதேவாவின் மனைவி ரம்லத் ஒரு சிறந்த டான்ஸர். அத்தோடு அவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒரு பெண். பிரபுதேவாவிற்கும் ரம்லத்திற்கும் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்கள்.

எனினும் திருமண பந்தத்திற்குள் ஒரு நடிகர் நுழையும் போது ரசிகர்களுக்கு அவர்கள் மேல் உள்ள ஈர்ப்பு போய் விடுமோ என்று எல்லாம் பயப்பிடுவார்கள்.

ஆனால் பிரபுதேவா ரொம்பவே போல்ட்டாக முடிவெடுத்து கல்யாணமும் பண்ணிக்கிட்டாரு" எனவும், கல்யாணம் பண்ணிக்கிட்ட அன்னைக்கு இரவு ரம்லத்தை தன்னுடைய வீட்டிற்கு கூட்டி வந்ததாகவும் கூறியிருக்கின்றார் ஜெயந்தி கண்ணப்பன்.

பிரபுதேவா தந்தைக்கு தெரியாமல் கல்யாணம் பண்ணிக்கிட்டதால் நானும், பி.வாசுவும், தாணுவும் அவங்க அப்பாக்கு சொல்லிட்டோம் எனவும் கூறியிருக்கார்.

மேலும் பிரபுதேவாவின் மூத்த மகன் புற்றுநோயினால் இறந்துள்ளதாகவும் கூறியிருக்கின்றார். அத்தோடு ரம்லத்திற்கும், பிரபுதேவாவிற்கு 3 குழந்தைகள் இருக்கின்ற நிலையில்  அவர்கள் பிரிந்து விட்டதாகவும் கூறி உள்ளார்.


அதுமட்டுமல்லாது யாருமே எதிர்பார்க்காத வகையில் "பிரபுதேவா வேறு திருமணம் செய்து விட்டதாகவும், அந்தப்பெண் பீகாரை சேர்ந்ததாகவும், அந்தச்செய்தி உண்மை தான்" எனவும் சமீபத்தில் இடம்பெற்ற அந்தப் பேட்டியில் கூறியிருக்கின்றார் ஜெயந்தி கண்ணப்பன்.

பிரபுதேவா மறுமணம் செய்து விட்டார் என்ற தகவலை அறிந்த ரசிகர்கள் மட்டுமல்லாது பல திரைப்பிரபலங்ககளும் ஆச்சர்யத்தில் மூழ்கி உள்ளனர். அதுமட்டுமல்லாது பிரபுதேவாவின் இந்த செயலுக்கு ஒரு சிலர் அவரைக் கண்டிக்கும் வகையில் எதிர்க்கருத்துக்களையும் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement