• Sep 20 2024

சுடுகாட்டில் அமர்ந்து உணவு உண்ட பிரபல காமெடி நடிகர்- சினிமாக்காரர்களுக்கு இது ஒரு சந்தர்ப்பமாம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் அருண் விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய ஓ மை டாக், யானை ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து சினம் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சினம் படத்தை இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கியிருக்கின்றார்.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.அப்போது இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த காளி வெங்கட் சில சுவாரஸியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.


அதாவது  கடந்த இரண்டு ஆண்டுகள் லாக்டவுன் இருந்தபோது பல கமிட்மெண்ட்டுகளால் பணம் இல்லாமல் சிரமப்பட்டதாகவும் வெளியில் கடன் வாங்க ஆரம்பித்ததாகவும் ஒரு கட்டத்தில் கடன் கொடுப்பவருக்கே காசு இல்லாத நிலைமை ஏற்பட்டதாகவும் கடன் அதிகரித்த நிலையில் அப்போதுதான் ஒரு நாள் காலை சினம் படத்திற்காக தனக்கு நடிகர் விஜயகுமார் முன்பணம் போட்டதாகவும் அந்த முன் பணத்தை வைத்தே தன்னுடைய மொத்த கடனையும் அடைத்து மீதமான பணத்தை சேமித்து வைத்துக் கொண்டதாகவும் காளி வெங்கட் நன்றி தெரிவித்துள்ளார்.

மற்ற துறையில் இருப்பவர்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு அமையுமா என்று தெரியவில்லை. ஆனால் சினிமாக்காரர்களுக்கு சுடுகாட்டில் படப்பிடிப்பு நடந்த போது அங்கேயே அமர்ந்து உண்ணக்கூடிய வாய்ப்பு அமையும். சில நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடந்ததால் அங்குள்ளவர்கள் தனக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டதாகவும் ஷூட்டிங்கின்போது தன்னிடம் வந்து அண்ணே சூட்டிங் எப்ப முடியும் என்று அவர்கள் கேட்க ஏனென்று நான் கேட்க வெளியில மூணு பீசு எரிவதற்காக வெயிட்டிங்ல இருக்கு என்று நகைச்சுவையாக கூறினார்களாம். 


அது மட்டுமின்றி சூட்டிங் முடிந்து கிளம்பும் வேளையில், அண்ணே நேரம் கிடைச்சா சுடுகாட்டுக்கு வந்துட்டு போங்க என்று தன்னை அழைத்ததாக நகைச்சுவையாக கூறியுள்ளார். உண்மையாகவே அதன்பின்னர் ஒருநாள் அந்த சுடுகாட்டிற்கு சென்று அவர்களை பார்த்ததாகவும் அவர்கள் அழைத்ததின் பேரில் அவர்கள் வீட்டிற்குச் சென்று உணவு சாப்பிட்டதாகவும் காளி வெங்கட் அந்த நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement