• Sep 20 2024

பிரிந்தது உடல் மட்டும் தான் உயிரில்லை- கணவரின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிக்கும் ஸ்ருதி போட்ட பதிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!


சின்னத்திரையில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட பிரபலங்களில் ஒருவர் ஸ்ருதி ஷண்முகப்பிரியா. நாதஸ்வரம் சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ஸ்ருதி அடுத்தடுத்து வாணி ராணி, கல்யாண பரிசு, பாரதி கண்ணம்மா, போன்ற பல தொடர்களில் நடித்தார்.

நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால், கல்லூரி படிக்கும் போதே சின்னத்திரையில் அறிமுகமான இவர், சில கோலிவுட் திரைப்படங்களிலும் சிறு சிறு வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ஸ்ருதி ஷண்முகப்பிரியா, கடந்தாண்டு மிஸ்டர் தமிழ்நாடு 2022 போட்டியில் பங்கேற்று இரண்டாவது பரிசை தட்டிச் சென்ற, அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.


இவர்களின் திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.திருமணத்திற்கு முன்பு ஸ்ருதி பாரதிகண்ணம்மா சீரியலில் ஹீரோவுக்கு அக்காவாக நடித்து வந்த நிலையில், திருமணத்திற்கு பின்னர் அதிரடியாக சீரியலில் இருந்து விலகி, முழுக்க முழுக்க குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார்.

இவருக்கு திருமணம் ஆகி, ஒரு வருடமே ஆகும் நிலையில் ஸ்ருதியின் கணவர் அரவிந்த் சேகர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் கணவர் இறந்தை உறுதி செய்யும் விதமாக ஸ்ருதி பதிவொன்றைப் போட்டுள்ளார். அதில் பிரிந்தது உடல் தான். ஆனால் உங்கள் ஆன்மாவும் மனமும் என்னைச் சூழ்ந்து இப்போதும் என்றென்றும் பாதுகாக்கிறது! என் அன்பே 


உங்கள் மீதான எனது அன்பு இப்போது மேலும் மேலும் அதிகரித்து வருகிறது, நாங்கள் ஏற்கனவே ஒருவருக்கொருவர் நிறைய நினைவுகளை வைத்திருந்தோம், அதை நான் வாழ்நாள் முழுவதும் மதிக்கிறேன். உன்னை மிஸ் யூ அண்ட் லவ் யூ அரவிந்த்! என் அருகில் உன் இருப்பை உணர்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார். இதனால் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement