• Sep 20 2024

'மீடியா முன்பு அருவருப்பாக பேசுவது கண்டனத்திற்கு உரியது'-இயக்குநர் ஹரியை திட்டி தீர்த்த ப்ளுசட்டை மாறன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய முக்கிய இயக்குநர் தான் ஹரி. இவரது இயக்கத்தில் யானை என்னும் புதிய படம் உருவாகியுள்ளது. இதில் கதாநாயகனாக அருண் விஜய் நடித்துள்ளார். இவருடன் நடிகை அபிராமி, சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் வரும் ஜூன் 17ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அந்த வகையில் நேற்றைய தினம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் ஹரி, படம் குறித்த ஆக்ஷன் காட்சிகள் பற்றி பேசுகையில், ஃபுளோவில் கெட்ட வார்த்தை ஒன்றை பேசிவிட்டார்.

பின்னர் ஹரி சிரித்துக்கொண்டே நான் இப்போ என்ன பேசினேன் கெட்ட வார்த்தையை விட்டுவிட்டேனா என்று கேட்டு சமாளித்தார். ஆனால் ஹரி வேண்டுமென்றே கெட்ட வார்த்தை பேசவில்லை என்பதும் வெளிப்படையாக தெரிந்தது. இந்நிலையில் இதுகுறித்து ப்ளுசட்டை மாறன் டிவிட்டியுள்ளார்.

அவர் பதிவிட்டிருப்பதாவது, 1,000 கோடி வசூல் தரும் பான் இந்தியா படங்களை எடுத்திருந்தாலும் பிரெஸ் மீட்டில் தலைக்கனம் இன்றி நாகரீகமாக பேசுகிறார்கள் ராஜமௌலி, பிரசாந்த் நீல், நடிகர் யாஷ் போன்றவர்கள். ஆனால் மிஷ்கின், ஹரி போன்றோர் மீடியா முன்பு அருவருப்பாக பேசுவது கண்டனத்திற்கு உரியது என ஊடகத்துறையினர் கருத்து.. என குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/tamiltalkies/status/1531817801866178560

இதனை பார்த்த நெட்டிசன்கள், உங்களுடைய கருத்தை நீங்களே நேரடியாக சொல்ல வேண்டியதுதானே, இதற்கு ஏன் ஊடகத்துறையினர் என குறிப்பிடுகிறீர்கள் என்று கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர் நீங்கள் முதலில் சரியாக பேசுங்கள் பின்னர் மற்றவர்களை குறை சொல்லலாம் என விளாசி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement