தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபல்யமானவர் தான் மகாலட்சுமி. இவர் தாமரை, வாணி ராணி, தேவதையைக் கண்டேன், பொண்ணுக்கு தங்க மனசு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபல்யமானவர் தற்பொழுதும் சீரியல்களில் நடித்து வருகின்றார்.
மேலும் இவர் கடந்த 2016ம் ஆண்டு ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார். பின்பு நடிகர் ஈஸ்வரனுடன் கிசுகிசுக்கப்பட்டதால் தனது கணவரைப் பிரிந்து விவாகரத்து பெற்றார்.இந்த நிலையில் இவர் தயாரிப்பாளரான ரவீந்திரனை சில நாட்களுக்கு முதல் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் பிரபல சேனல் ஒன்றிற்கு இருவரும் அண்மையில் பேட்டியளித்திருந்தனர்.அதில் ரவீந்திரன் கூறியதாவது இருவரும் கல்யாணம் ஒரு மனிதனுடைய லைப் ஸ்டைல எப்படி மாற்றும் என்ற விடயத்துக்காகத் தான் இந்தத் தடவை நான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன்.இது மகாலட்சுமிக்கு மட்டுமல்ல எனக்கும் இரண்டாவது திருமணம் தான்.
இந்த 90கிட்ஸ் தான் எங்களை ரொம்ப வச்சு செய்யிறாங்க.நான் என்னமோ அவங்களுக்கு துரோகம் பண்ணுற மாதிரி சொல்லுறாங்க தெரில. இவங்க முதல்ல கல்யாணம் பண்ணுவோம் என்று சொல்லும் போது நான் உடம்பைக் குறைச்சிட்டு வாரேன் என்று கூறினேன்.ஆனால் அவங்க அதெல்லாம் வேணாம் நாம கல்யாணம் பண்ணுவோம் என்று கூறியிருந்தாங்க
நான் குண்டா இருக்கிறது மற்றவங்களுக்கு தான் கஸ்டமா இருக்கு போல. அத்தோடு இந்தப் பொண்ணு பணத்துக்காகத் தான் கல்யாணம் பண்ணிச்சு என்று கூறினாங்க ஆனால் பணத்துக்காக பண்றது என்றால் அந்த பொண்ணு ஏன் இந்த முறையில் வரணும். இதை சொல்லுற நமக்கே இது புரியும் இவள மாதிரி நல்ல பொண்ணு நிறைய பேர் இருக்கிறாங்க அதை யாரும் ஏற்றுக் கொள்ளுறதில்லை.
எங்கட திருமணம் சாதாரண திருமணம் தான் ஆனால் இதை பான் இந்திய திருமணம் அளவுக்கு பண்ணிட்டாங்க. தொடர்ந்து பேசிய மகாலட்சுமி கூறியதாவது எங்க கல்யாணத்துக்கு நிறைய பேர் போன் பண்ணி விஸ் பண்ணினாங்க.அது ரொம்ப சந்தோஷமாக இருக்கு. ஆனால் எங்க கல்யாணம் குறித்து தப்பா பேசிறவங்க முன்னாடி இன்னும் நல்லா வாழ்ந்து காட்டணும் என்று தான் இருக்கு மற்றும் படி கவலை என்று ஒன்றும் இல்லை.
எனக்கு இவங்க கூட வாழ்ந்தால் சந்தோஷமா இருப்பேன். என் பையன் நல்லா இருப்பான். எங்களை இவர் நல்லா பார்த்துப்பாங்க என்று நம்பிக்கையும் இருக்கு என்று அந்த பேட்டியில் கூறியதைக் காணலாம்.
Listen News!