நடிகர் சிவகுமாரின் மகள் பிருந்தா சிவகுமார், இவர் ஒரு பாடகியாவார். ராப் சிங்கராக ரசிகர்களை அசத்தி வருகிறார்.
இவர் தமிழில் பல பாடல்களை பாடி உள்ளார். ஆனால் இவர் ஒரு சிங்கர் என்பது இன்னும் பலபேரிற்கு தெரியாத ஒரு விஷயம். அவர் ஒரு பேட்டியில் இவ்வாறு பேசி இருந்தார், பிரபு தேவா சாரின் காக்கா சாங் பெரிய அண்ணன் தான் கத்து கொடுத்தார் அவர் பாடிகிட்டே இருப்பார்.
சூர்யா அண்ணா நடித்த படங்களில் ஆரம்பத்தில் சில படங்கள் சரியாக ஓடவில்லை, தியேட்டரில் எல்லாரும் நக்கல் அடித்தனர், அப்போது எனக்கு செம்ம கோவம் வந்தது. ஆனால் அந்த படங்களை திருப்பி போடும் வகையில் அமைந்தது நந்தா படம் தான்.
நந்தா படம் செம்ம ஹிட் ஆனது. இந்த படத்திற்கு நான் ரொம்பவே ரசிகை ஆகிட்டேன். அதிலிருந்து அவருடைய படங்கள் எல்லாம் ஹிட் ஆகிக்கொண்டு போனது. எனக்கும் கார்த்திக்கும் போட்டி வரும். கார்த்தியுடைய பருத்திவீரன் பட பூஜை அன்று தான் நானும் எனது முதல் பாடலை பாடினேன்.
எனக்கு எனது முதல் பாடலை கோவிலில் பாட வேண்டும் என்று ஆசை இருந்தது. அதே போல பருத்தி வீரன் பூஜை முடிய என்னுடைய குரு என்னை அழைத்து பாடவைத்தார் என்று தனது குடும்ப சுவாரஷ்யமான விஷயங்களை கூறி இருந்தார்.
Listen News!