தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்ஷிகா சமீபத்தில் தான் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார். அதாவது ஹன்சிகா தன்னுடைய நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னரும், மற்றும் தோழியின் முன்னாள் கணவருமான சோஹைல் கதுரியா என்பவரைத் தான் திருமணம் செய்து கொண்டு உள்ளார்.
அந்தவகையில் ஹன்சிகா - சோஹைல் கதூரியா ஜோடியின் திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமைவாய்ந்த முண்டோடா அரண்மனையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து தற்போது இவர்களின் திருமணப் புகைப்படங்கள் வெளிவந்த வண்ணம் தான் இருக்கின்றன. அந்தவகையில் தற்போது ஹன்ஷிகாவின் கணவரான சோஹைல் திருமணப் புகைப்படம் ஒன்றினைத் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார்.
அதில் "நீங்கள் ஒரு கனவு கண்டால், நீங்கள் அதைப் பற்றிக்கொள்ள வேண்டும், ஒருபோதும் விடக்கூடாது" எனக் குறிப்பிட்டிருக்கின்றார். இதன் மூலமாக சோஹைல் இற்கு ஹன்ஷிகாவை திருமணம் செய்ய வேண்டும் என்ற கனவு நீண்ட நாட்களாக இருந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
இதனைப் பார்த்த ரசிகர்கள் அந்த பதிவினை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
Listen News!