காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, சூது கவ்வும், நேரம் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் பாபி சிம்ஹா.இவர் நடித்த ஜிகர்தண்டா படத்திற்காக தேசிய விருதும் பெற்றார். இந்த நிலையில் இவர் தற்பொழுது முதன்முறையாக கமலுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பாபி சிம்ஹா, கமல்ஹாசனை முதன்முறை நேரில் சந்தித்தது குறித்து நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து பேசியுள்ள அவர், கமல் சார் ஒரு யுனிவர்சிட்டி, அவர் போல ஒரு நடிகரை பாக்கவே முடியாது அவர் வேற லெவல் சொல்லப்போனால் அவர்தான் சினிமா, நானும் ஹீரோ அவரும் ஹீரோன்னு சொல்றதே தப்பு, தான் பெரிய லிஜெண்ட் என்ற கர்வம் கூட இல்லாமல் எல்லோரிடமும் சகஜமாக ஜாலியாக பேசுற நல்ல மனிதர் கமல் என கூறியுள்ளார்.
மேலும், சூது கவ்வும் பார்த்துட்டு எங்களை பாராட்டுவதற்காக அவரது ஆஃபிஸ்க்கு வர சொல்லியிருந்தார். கருணாகரனும் அசோக் செல்வனும தீவிர கமல் சார் வெறியர்கள், முதல்தடவை கமல் சாரை நேரில் பார்க்கும் போது அப்படி ஒரு ஈர்ப்பு, ஒளி, நம்பிக்கை. அப்போதுதான் எனக்கு தெரிஞ்சது அவர் ஏன் அப்படி இருக்கிறார் என்று.
சூது கவ்வும் படத்தில் எனது கேரக்டரின் பெயரை குறிப்பிட்டு நல்லா நடிச்சிருக்கீங்க என சொன்னதும் நான் அப்படியே நெகிழ்ந்துவிட்டேன் என பாபி சிம்ஹா பேசியுள்ளார். அவரது இந்த பேட்டியை கமல் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!