பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரரை கடுமையாக விமர்சித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் நடிகை கஸ்தூரி சங்கர்.
தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரேகரனும், டிவி நடிகையான மகாலக்ஷ்மியும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் செப்டம்பர் முதலாம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள்.
இவ்வாறுஇருக்கையில் இவர்களின் திருமணம் குறித்து பேச்சுக்கள் தான் தற்போது சோஷியல் மீடியாவில் பெரும் பரபரப்பை கிளப்பி ஹாட் டாப்பிக்காக உள்ளது.
இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் . ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய மகாலக்ஷ்மிக்கு ஒரு மகனும் உள்ளார்.
இந்நிலையில் இந்த புது தம்பதியினர் தனியார் யூடிப் சேனலுக்கு ஜோடியாக பேட்டியளித்து வருகின்றனர். இந்த பேட்டிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் தமது கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் புதிதாக திருமணம் செய்துக் கொண்ட ரவீந்தர் சந்திரசேகர், மகாலட்சுமியை கடுமையாக விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை கஸ்தூரி ஷங்கர்.
கடந்த வாரம் காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களின் பேட்டிகள் தான் இணையம் முழுவதையும் ஆக்கிரமித்துள்ளன. இந்நிலையில் தனியார் டிவி சேனல் ஒன்று ரவீந்தர், மகாலட்சுமியை பேட்டி எடுத்துள்ளது.
இதற்கான புரோமோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கஸ்தூரி, பேட்டி எடுத்தவருக்கும் குடுத்தவருக்கும் எப்படியோ, பார்க்க எனக்கு கூசிற்று. YouTube channels எல்லாம் வெட்கி ஜகா வாங்கவேண்டும் என்று நியூஸ் சேனல்ஸில் இறங்கிட்டாங்களா ? நிறுத்துங்கள் ரவீந்தர்” என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் தீயாய் வைரலாகி வருகிறது.
Listen News!