• Sep 20 2024

செருப்பால் அடிக்க முயன்ற மூன்றாவது மனைவி மீது புகார் கொடுத்த நடிகர் மகேஷ்பாபுவின் சகோதரன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகராக மாறி இருப்பவர் தான் நரேஷ் பாபு . இவர் நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரர் ஆவார். ஏற்கனவே மூன்று திருமணங்கள் புரிந்த இர் இதில் இரண்டு மனைவியரை விவாகரத்து செய்து விட்டு மூன்றாவது மனைவியான ரம்பா ரகுபதி என்பவருடன் வாழ்ந்து வந்தார்.

கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக நரேஷ் பாபுவும் ரம்யாவும் பிரிந்து வாழும் இவர் நடிகை பவித்ராவுடன் நெருக்கமாக இருப்பதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் நரேஷ் பாபு 45 வயதான நடிகை பவித்ராவுடன் நெருக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

சமீபத்தில் இருவரும் ஹோட்டலில் ஒன்றாக தங்கியிருப்பதை அறிந்த அவரது மனைவி ஹோட்டலுக்கு நேரடியாக சென்று இருவரையும் செருப்பால் அடிக்க முயன்றார்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நடிகர் நரேஷ் பாபு தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் தனது மூன்றாவது மனைவி குறித்து பகீர் குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார்.
அதாவது, ரம்யா தன்னை மிகவும் சித்ரவதை செய்து வருவதாகவும், பணம் கேட்டு பிளாக் மெயில் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில்தான் ரம்யாவுக்கு 10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாக கூறியுள்ள நரேஷ் பாபு, மீண்டும் மீண்டும் பணம் கேட்டு ரம்யா தன்னை தொல்லை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பதாகவும் அதில் 100க்கும் மேற்பட்ட பெண்களுடன் தான் நடித்துள்ளதாகவும் கூறியுள்ள நரேஷ் பாபு, இதுவரை தன்மீது யாருமே தவறான புகார்களை கூறியதில்லை என தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement