சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘எதிர்நீச்சல்’ தொடரில் ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மாரிமுத்து. இந்த சீரியலில் இவர் பேசும் வசனங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இவர் தொடர்பான மீம்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ட்ரெண்ட் ஆகி வருகின்றன.
இதற்கு முன்பே இவர் பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ’கண்ணும் கண்ணும்’, ‘புலிவால்’ உள்ளிட்ட படங்களை இயக்கியும் உள்ளார். ’பரியேறும் பெருமாள்’ படத்தில் கதாநாயகியின் தந்தையாக நடித்த இவரது கதாபாத்திரம் பேசப்பட்டது.
சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.30 வருடமாக சினிமாவில் இருந்தாலும் இருப்பினும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது எதிர் நீச்சல் சீரியல் தான். இந்த சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு திடீரென இறப்புக்குள்ளானார்.
இவரது இறப்பு இன்றும் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கின்றது.இந்த நிலையில் அண்மையில் மாரிமுத்துவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது. அதில் அவரது மனைவி பாக்கியா பேசும்போது, மாரிமுத்து மறைவு செய்தி கேட்டு பேச முடியாத, காது கேட்காத ஒருவர் எங்களது வீட்டி முகவரி மட்டுமே வைத்துக்கொண்டு வந்தார்.
அவரைப் பார்த்ததும் எங்களுக்கு அதிர்ச்சி ஆகிவிட்டது. என் கணவர் சம்பாதித்த உள்ளங்களை பார்த்து வியந்தோம்.அவருக்கு உணவு கொடுத்து, கொஞ்சம் பணம் கொடுத்து அவரை அனுப்பி வைத்தோம்.
அவரை கண்டதும் மாரிமுத்துவே எங்களை காண வந்தார் எனக்கு தோன்றியது. அவருக்கு பரிசு கொடுத்து அன்பை வெளிக்காட்ட எல்லாம் தெரியாது. ஆனால் அவருக்கு நாங்கள் மூவர் மட்டுமே உயிர், எங்களுக்காகவே கடைசி வரை வாழ்ந்து சென்றுள்ளார் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
Listen News!