• Sep 20 2024

இந்த நடிகைக்காக தான் ஜோதிகா மீண்டும் நடிக்க வந்தார்... ரகசியத்தை போட்டுடைத்த பிரபல பத்திரைகையாளர்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை ஜோதிகா திருமணத்திற்கு பின்னர்  மீண்டும் நடிக்க வந்ததற்கான காரணத்தை கூறியுள்ளார் நடிரும் பிரபல பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன்.

வாலி படத்தின் மூலம் தமிழ்  திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. அதன்பின்னர்  அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்த ஜோதிகா நடிகர் சூர்யாவுடன் மட்டும் 7 படங்களில் நடித்துள்ளார். நடிகர் சூர்யாவை காதலித்து கடந்த 2006ஆம் திருமணம் செய்து கொண்டார் நடிகை ஜோதிகா. அத்தோடு சூர்யா ஜோதிகா தம்பதிக்கு தியா, தேவ் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

திருமணத்திற்கு பின்னர்  சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை ஜோதிகா 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ஜோதிகா தற்போது இந்தி சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார்.எனினும்  இதற்காக குடும்பத்துடன் மும்பையில் செட்டிலாகி விட்டார் நடிகை ஜோதிகா.



இவ்வாறுஇருக்கையில்  நடிகை ஜோதிகா மீண்டும் நடிக்க வந்த காரணத்தை கூறியுள்ளார் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன். இதுதொடர்பாக அவர் பேசியிருப்பதாவது, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருந்தவர்கள் சிம்ரன் மற்றும் ஜோதிகா. அத்தோடு ஜோதிகா குடும்ப பாங்கான படங்களில் நடித்துள்ளார். அவருடைய நடிப்பு திறமையை காட்டிய படம் சந்திரமுகிதான். சந்திரமுகி படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார் ஜோதிகா.

முதலில் அந்த வாய்ப்பு சிம்ரனுக்குதான் கொடுக்கப்பட்டது. ஆனால் சிம்ரன், தான் ரஜினிக்குதான் ஜோடியாக நடிப்பேன், பிரபுவுக்கு ஜோடியாக நடிக்க முடியாது என மறுத்துவிட்டார்.அத்தோடு  சிம்ரன் கதையின் நாயகியாக பல படங்களில் நடித்துள்ளார் கோவில்பட்டி வீரலட்சுமி படத்தில் சிம்ரன் கதையின் நாயகியாக நடித்துள்ளார். விஐபி மற்றும் ஒன்ஸ்மோர் ஆபிய படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகின.

மேலும் ஒரு கதாநாயகிக்கு ஒரே நாளில் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆவது நடிகை சிம்ரனுக்கு மட்டும்தான். சிம்ரன் ஒரே வருஷத்தில் 8 படங்களில் நடித்துள்ளார். எந்த கதாப்பாத்திரம் என்றாலும், வில்லி, குடும்ப பாங்கு, வெஸ்டர்ன் போன்ற எந்த கதாப்பாத்திரம் என்றாலும் நடிகை சிம்ரன் கச்சிதாமாக பொருந்துவார். எனினும் அதற்கு காரணம் அவருடைய ஒல்லியான உடல்வாகுதான்.வாலி படத்தின் அறிமுகமான ஜோதிகா, முகவரி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தார்.

ஜோதிகாவின் உடல்வாகு சிம்ரன் போல் இல்லை. ஜோதிகா சில கதாப்பாத்திரங்களுக்குதான் பொருந்துவார். மாயாவி படத்தில் சூர்யா ஜோதிகா இணைந்து நடித்தார்கள். அந்தப் படத்தில் ஓவர் ஆக்டிங், 10 ரூபாய் கொடுத்தால் 1000 ரூபாய்க்கு நடிப்பது என ஜோதிகாவை பயங்கரமாக கலாய்த்திருப்பார் சூர்யா. சிம்ரன் போஸ்டரையே பல மணி நேரம் பார்ப்பேன் என்று வருங்கால மனைவியாவார் என்று தெரியாமல் வெறுப்பேற்றியிருப்பார் சூர்யா.

சிம்ரனை ஓவர்டேக் செய்ய நினைத்தார் ஜோதிகா. ஆனால் அவரால் முடியவில்லை. சிம்ரன் அனைத்து நடிகர்களுடன் நடித்து விட்டார். நடனம், சண்டை என கலக்கினார். சிம்ரன் ஹோட்டல் பிஸ்னஸ் தொடங்கினார். ஆனால் புத்திசாலித்தனமாக அவர் சொந்தமாக படம் தயாரிக்கவில்லை. அத்தோடு சூர்யா ஜோதிகா திருமணத்திற்கு பின்னர்  சிம்ரன் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். சிம்ரன் நடிப்பதை பார்த்துதான் ஜோதிகா மீண்டும் நடிக்க வந்தார்.


சிம்ரன் அளவுக்கு ஜோதிகாவுக்கு ரசிகர்கள் இல்லை. இப்போதும் நல்ல பாத்திரம் என்றால்தான் நடிக்கிறார் சிம்ரன். அத்தோடு ஜோதிகா தற்போது இந்தி மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். ஜோதிகா இந்தி வெப்சீரிஸ்களிலும் நடிக்க போகிறார. ஆனால் சிம்ரனுக்கு இந்தியில் நடிக்க விருப்பமில்லை. தமிழ் திரையுலகை  பொருத்தவரை நம்பர் ஒன் சிம்ரன், அடுத்த இடங்கள்தான் ஜோதிகாவுக்கு. ஜோதிகாவால் சிம்ரனை ஓவர்டேக் செய்ய முடியவில்லை.

சிம்ரன் பாலா படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். மேலும் அது ஒன்றே போதும் சிம்ரனின் நடனத்தை பற்றி சொல்ல. ஜோதிகாவுக்கு நடிப்பு திறமையை காட்ட வாய்ப்பு கிடைக்கவில்லை. சந்திரமுகி படத்தில் மேக்கப்புக்கு ஏற்றதுபோல் நடித்திருந்தார். சிம்ரனால்தான் நடிகை ஜோதிகா மீண்டும் நடிக்க வந்தார். அவர் நடிக்கும் போது நாம் ஏன் நடிக்கக்கூடாது என்றுதான் ஜோதிகா மீண்டும் நடிக்க வந்தார். நடிப்பை பொருத்தவரை சிம்ரனுக்கு பிறகுதான் ஜோதிகா... இவ்வாறு பயில்வான் ரங்கநாதன் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement