தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனின் மாவீரன், அயலான் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இதனைத் தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் SK 21 படத்தில் நடித்து வருகிறார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி இருவரும் முதன்முறையாக இணைந்துள்ளனர்.
இந்த படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடரும் என சொல்லப்படுகிறது.
இதனிடையே SK 22 படம் குறித்தும் அடுத்தடுத்து அப்டேட்ஸ் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. அதன்படி, இந்தப் படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க இரண்டு முன்னணி நாயகிகளிடையே கடும் போட்டி காணப்படுகிறதாம். அதில் ஒருவர் சீதா ராமம் நாயகி மிருணாள் தாகூர் என சொல்லப்படுகிறது.
அதேநேரம் SK 22 படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாம். ஆனால் இதுவரை இது குறித்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!